வாக்குப் பதிவு எந்திரம் மீது நம்பிக்கை போச்சு.. மீண்டும் வாக்குச் சீட்டு தேவை.. ஜவாஹிருல்லா
திருச்சி: மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையையே அமுல்படுத்திட வேண்டும் மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
திருச்சி கே.எம்.எஸ். ஹக்கீம் மினி மஹாலில் நடைபெற்ற விடுதலைப் பெரும்போரில் வீரமிகு உலமாக்கள் என அவர் எழுதிய நூல் அறிமுக விழாவுக்குப் பின்னர் அவர் கூறியது:

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிப்பது நம்பிக்கையற்றது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் நம்பகத்தன்மைக்கு எதிராக பலரும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிவிக்கும் வகையிலும், மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையிலும் வரவிருக்கும் தேர்தலை நடத்த வேண்டும்.இதற்கு மீண்டும் வாக்குச்சீட்டு முறையையே அமல்படுத்திட வேண்டும்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மோசடி செய்துதான் மோடி வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. டெல்லியில் நடந்த தேர்தலில் மோசடி செய்ய முடியாததால் தான் ஆம் ஆத்மி வெற்றி பெற முடிந்தது. மும்பையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போதும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் தேர்தல் நடந்தது. அத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு சாதகமாகத்தான் வாக்குகள் விழுந்தது தெரிய வந்தது. எனவே மீண்டும் வாக்குச்சீட்டு முறையையே அமல்படுத்திட வேண்டும். வளர்ந்துள்ள பல வெளிநாடுகளில் இன்றும் வாக்குச்சீட்டு முறையைத் தான் கடைப்பிடிக்கிறார்கள்.
அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் நடத்தும் போராட்டத்துக்கு தமிழக அரசு செவிசாய்க்காமல் உள்ளது. அவர்களது நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும். அண்மையில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள 10 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வழக்குத் தொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் ஜன.26 முதல் 28 வரை இஸ்லாமியர்கள் மாநாடு, நடைபெறவுள்ளது. நிறைவு நாளான ஜன. 28 ஆம் தேதி ஒரு நாள் மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனவும் இஸ்லாமியர்கள் அதிகமாக இருப்பதால் தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications