திருச்சி இல்லையென்று சொன்னால் ராமநாதபுரம்! திமுகவிடம் காய் நகர்த்தும் திருநாவுக்கரசர்! என்ன பின்னணி?
திருச்சி: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருச்சியில் மீண்டும் களமிறங்க விரும்பும் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், ஒரு வேளை அந்தத் தொகுதி கிடைக்காவிட்டால் ராமநாதபுரம் தொகுதியிலாவது களமிறங்கிவிட வேண்டும் என காய் நகர்த்துகிறாராம்.
ராமநாதபுரம் தொகுதியை பொறுத்தவரை இந்த முறை திமுகவே நேரடியாக போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது. திமுக மாணவரணி தலைவர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி இதற்காக காய் நகர்த்தி வரும் வேளையில், திருநாவுக்கரசரும் ராமநாதபுரம் தொகுதி மீது ஒரு கண் வைத்திருக்கிறார். தாம் சார்ந்த முக்குலத்தோர் சமுதாய வாக்குகளும், காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிக்கும் சிறுபான்மை சமுதாயத்தினர் வாக்குகளும் தன்னை கரை சேர்த்துவிடும் எனக் கணக்குப் போடுகிறார் திருநாவுக்கரசர்.

திருச்சியில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பதே திருநாவுக்கரசர் எம்.பி.யின் விருப்பம். 100க்கு 70% திருச்சியை குறி வைத்து களப்பணிகளை தொடங்கியிருந்தாலும் கடைசி நேர அரசியல் மாற்றத்தால் எதுவும் நடக்கலாம் என்பதால், இப்போதே உஷாராக கூடுதலாக ராமநாதபுரம் தொகுதி பக்கமும் பார்வையை பதித்து வருகிறார் திருநாவுக்கரசர். இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், தன்னை அரசியலில் அடையாளம் காட்டிய அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள் வருவது தான்.
அதுமட்டுமல்ல ராமநாதபுரம் தொகுதியில் ஏற்கனவே கடந்த 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் கூட்டணியின்றி தனித்து களம் கண்டு கணிசமான வாக்குகளை பெற்றவர் திருநாவுக்கரசர். எல்லாம் சரி, முஸ்லீம் லீக் நிலை என்ன என்ற கேள்வி எழுவது புரிகிறது. அநேகமாக முஸ்லீம் லீக்கிற்கு திருச்சி அல்லது மயிலாடுதுறை தொகுதி கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள திருநாவுக்கரசர் தனது சோர்ஸ்கள் மூலம் ராகுல் காந்தியின் நெருங்கிய வட்டத்திற்குள் நுழையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இப்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் கூட ராகுலுடன் மிகவும் இணக்கம் காட்டி வருகிறார் திருநாவுக்கரசர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications