வக்பு வாரியம்.. தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது! முதல்வருக்கு நன்றி - காதர் மொகிதீன்
திருச்சி: மத்திய அரசு கொண்டு வந்த வக்பு சட்டத்திற்கு எதிராக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் 'உமீத்' சட்டத்தின்படி தமிழகத்தில் வக்பு வாரியம் அமைக்கப்படாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்புக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து காதர் மொகிதீன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "இஸ்லாமிய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் பெற்றுத் தரும் இயக்கமாக தி.மு.க செயல்பட்டு வருகிறது என்பதற்கு வக்பு வாரியம் தொடர்பான தமிழ்நாடு அரசின் அறிவிப்பு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். முஸ்லிம் சமுதாயத்தின் நன்மைக்காக தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு அனைத்து வகைகளிலும் செயல்பட்டு வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததுடன் தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது. பாலஸ்தீன மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து தொடர்பாகவும் தொடர்ந்து குரல் எழுப்பி வருவது தி.மு.க. அரசுதான். ஒன்றிய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த வரிசையில் ஒன்றிய அரசு அவசர கதியில் கொண்டு வந்த 'உமீத்' சட்டத்தின்படி தமிழ்நாடு வக்பு வாரியம் அமைக்கப்படாது என்று தமிழ்நாடு அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது " என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications