Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் இறந்துவிட்டேன்! தொகுதியும் காலியாகிடுச்சி! தனக்கு தானே பேஸ்புக் பதிவு போட்ட லால்குடி எம்எல்ஏ

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தனக்கு தானே மரண செய்தியை லால்குடி தொகுதி எம்எல்ஏ சவுந்திரபாண்டியன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டசபை தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறை எம்எல்ஏவாக இருப்பவர் சவுந்திரபாண்டியன். இவர் கடந்த சில மாதங்களாக அரசு விழாக்களில் பங்கேற்காமல் இருந்து வந்துள்ளார்.

lalgudi trichy tamil nadu

இந்த நிலையில் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் புதிய பேருந்து நிலையம், வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய அலுவலகம் மற்றும் சார் பதிவாளர் அலுவலக கட்டடம் கட்டுவதற்கான இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் இந்த ஆய்விலும் லால்குடி சட்டசபை உறுப்பினர் என்ற முறையில் சவுந்திரபாண்டியன் பங்கேற்கவில்லை.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியானது. அதில் யார் யார் கலந்து கொண்டனர் என்பதெல்லாம் தெரியவந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்கவில்லை என்ற காரணத்தால் சவுந்திரபாண்டியன் தான் இறந்துவிட்டதாக ஒரு கமென்ட்டை போட்டுள்ளார்.

இதுகுறித்து பேஸ்புக் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆக இருக்கக்கூடிய சௌந்தர பாண்டியன் இயற்கை எய்தி விட்டதால் அந்த தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளது திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+