லலிதா ஜுவல்லரி கொள்ளை.. அன்று இரவு மழை பெய்தது.. அதுதான் எங்களுக்கு சாதகமானது.. பரபர வாக்குமூலம்!
திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை எப்படி நடந்தது என்று முக்கிய வாக்குமூலத்தை கைதான கொள்ளையன் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை எப்படி நடந்தது என்று முக்கிய வாக்குமூலத்தை கைதான கொள்ளையன் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2ம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை நடந்தது. முகத்தில் மாஸ்க் அணிந்து, இரவோடு இரவாக லலிதா ஜுவல்லரி சுவரை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளனர்.
மொத்தம் 30 கிலோ தங்க நகைகள் அந்த பகுதியில் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

கொள்ளையடிக்கப்பட்டது
இந்த நிலையில் இந்த கொள்ளை எப்படி நடந்தது என்று முக்கிய வாக்குமூலங்களை கைதான மணிகண்டன் தெரிவித்துள்ளார். அதன்படி முருகன் பல நாட்களுக்கு முன்பே இந்த கொள்ளை குறித்த திட்டத்தை கூறிவிட்டார். இதற்காக அந்த நகை கடையை தீவிரமாக கண்காணித்து வந்தோம். நான்கு வாட்ச்மேன்களையும் தீவிரமாக கண்காணித்தோம்.

நகை கடை
இந்த நகை கடைக்கு அருகே பக்கத்தில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதனால் இரவில் அவ்வப்போது சத்தம் கேட்கும். இதை பயன்படுத்தி சுவரை இடித்தோம். இதனால் கடையில் சுவரில் துளை போட்ட போது யாருக்கும் பெரிதாக சந்தேகம் வரவில்லை.

எப்படி காத்திருப்பு
அங்கே எப்போது ஆட்கள் இருக்க மாட்டார்கள். எப்போது போலீஸ் ரோந்து இருக்காது என்று தீவிரமாக கண்காணித்தோம். அதனால் அதிகாலை 4.30 மணிக்குத்தான் கடைக்கு உள்ளே நுழைந்தோம் என்று கூறி உள்ளனர்.

எப்போதும் எப்படி
அந்த கடைக்கு வெளியே எப்போதும் 10 நாய்கள் இருக்கும். அதை எப்படி சமாளித்தார்கள் என்றும் மணிகண்டன் தெரிவித்துள்ளார். நாங்கள் அந்த நாயை சமாளிக்க ஏற்பாடுகள் செய்து இருந்தோம். ஆனால் அதற்கு தேவையில்லாமல் போய்விட்டது. நாங்கள் கொள்ளையடித்த அன்று இரவு மழை பெய்தது.

எங்கே சென்றது
இதனால் அங்கிருந்த நாய்கள் எல்லாம் எங்கேயோ போய்விட்டது. நாங்கள் கொள்ளையடிக்க சென்ற போது அங்கு நாய்களே இல்லை. இது எங்களுக்கு உள்ளே செல்ல சாதகமாக இருந்தது, என்று மணிகண்டன் கூறியுள்ளார். இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முருகன் இன்னும் கைதாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications