காவிரியில் வெள்ளம்... ஒரே ஆண்டில் 2வது முறையாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை
மேட்டூா் அணையில் நீா்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக 100 அடியாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி: காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால் மேட்டூா் அணையில் நீா்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக 100 அடியாக உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்தால் அணை நிரம்பும். அணையின் முழு கொள்ளளவு 93.45 டி.எம்.சியாகும்.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. திங்கட்கிழமையன்று காலை 99.11அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 99.90 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அளவு வினாடிக்கு 26,102 கனஅடியிலிருந்து 27,212 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் தற்போது 64.71 டி.எம்.சி. தண்ணீர் நீர் இருப்பு உள்ளது. நடப்பு நீா்ப்பாசன ஆண்டில் ஜூன் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூா் அணையில் இருந்து
தண்ணீா் திறக்கப்பட்டது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்த நிலையில், அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டதால் ஜூன் 16ஆம் தேதி அணையின் நீா்மட்டம் 100 அடிக்கும் கீழாகச் சரிந்தது. தொடா்ந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டதன் காரணமாக மளமளவென அணையின் நீா்மட்டம் சரிந்து வந்த நிலையில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம், வயநாட்டிலும் மழை பெய்ய தொடங்கியது.
அங்குள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகள் நிரம்பியதால் அந்த அணைகளின் பாதுகாப்புக் கருதி நடப்பாண்டில் உபரி நீா் காவிரியில் வெளியேற்றப்பட்டது. உபரி நீா்வரத்து காரணமாக மேட்டூா்அணையின் நீா்மட்டம் உயா்ந்து செப்டம்பா் 25ஆம் தேதி நடப்பு ஆண்டில் முதல்
முறையாக அணை நீா்மட்டம் 100 அடியாக உயா்ந்தது. எனினும் ஒரே நாளில் மீண்டும் அணையின் நீா்மட்டம் குறையத் தொடங்கியது.
கடந்த வாரத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததால், கடந்த 3 நாள்களாக அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வந்தது. செவ்வாய்க்கிழமை காலை அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 27,212 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீா்மட்டம் 99.90அடியாக உயா்ந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 14,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 900கனஅடி நீரும் திறக்கப்பட்டு வந்தது. அணைக்கு வரும் நீா்வரத்தை விட காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா்த் திறப்பு குறைவாக இருப்பதால் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணிக்கு அணையின் நீா்மட்டம் நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக 100 அடியாக உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு மேட்டூர் அணை நீர் மட்டம் தொடர்ந்து 308 நாட்களுக்கு மேல் 100 அடியாக இருந்தது. இதே போல கடந்த 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2006ஆம் ஆண்டு அக்டோபர் வரை 400 நாட்களுக்கு மேல் 100 அடி நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை சரியான அளவு பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழையும் தீவிரமடையும் பட்சத்தில் மேட்டூர் அணையின் நீர் இருப்பு 100 அடிக்கு குறையாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications