Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் நிவாரண பொருட்கள் அளித்த அமைச்சர் வளர்மதி..!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் அமைச்சர் வளர்மதி காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை வழங்கினார்.

மேலும், ஸ்ரீரங்கம் தொகுதிகுட்பட்ட அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க ரூ. 1 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

minister valarmathi provide groceries and vegetables to poor families

ஊரடங்கு உத்தரவு நீங்கும்வரை உணவின்றி தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து உணவுடன் முட்டை, பழங்களும் சேர்த்து வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஶ்ரீரங்கம், அம்மா மண்டபம் ஆகிய அம்மா உணவகங்களில் இலவச உணவு திட்டத்துக்காக ரூ.1 லட்சம் காசோலையை மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனிடம் அமைச்சர் எஸ்.வளர்மதி இன்று வழங்கினார்.

அதேபோல் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அமைச்சர் வளர்மதி தினமும் தினமும் ஏதாவது கிராமங்களில் சென்று ஊரடங்கால் வேலைக்கு செல்லாமல் உள்ள ஏழை ஏளிய மக்களுக்கு ஜந்து கிலோ அரிசி சிப்பம் மற்றும் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் வழங்கி வருகிறார்.

அதன் அடிப்படையில் திருவானைக்காவல் களஞ்சியம் பகுதியில் வசிக்கும் 100-க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கும் அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் வளர்மதி வழங்கினார். hஶ்ரீரங்கம் தொகுதியில் ஒவ்வொரு ஊராட்சியாக சென்று அங்குள்ள ஏழை ஏளிய மக்களுக்கு ஜந்து கிலோ அரிசி ,காய்கறிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அமைச்சர் வளர்மதி தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+