நான் இரவல் ஆளுநரா? தமிழகம் வருவதை யாராலும் தடுக்க முடியாது..தமிழிசை சவுந்தரராஜன் பரபர
நான் இரவல் ஆளுநர் கிடையாது இரக்கம் உள்ள ஆளுநர் என்று புதுவை மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சென்னை: நான் இரவல் ஆளுநர் கிடையாது இரக்கம் உள்ள ஆளுநர் என்று புதுவை மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். மேலும், தமிழகத்தை பற்றி நான் சொல்ல விரும்பவில்லை. அந்தந்த மாநில பிரச்சினைகளை அந்தந்த மாநிலத்தவர்களே பார்த்துக்கொள்ளட்டும் என்றும் கூறினார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் என்.ஐ.டி.யில் மகளிர் தினவிழாவில் பங்கேற்பதற்காக தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி பொறுப்பு ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் திருச்சி வந்தார்.
அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை சவுந்தரராஜன்," தமிழகத்தை பற்றி நான் சொல்ல விரும்பவில்லை. அந்தந்த மாநில பிரச்சினைகளை அந்தந்த மாநிலத்தவர்களே பார்த்துக்கொள்ளட்டும். மற்ற மாநில விவகாரங்கள் குறித்து நான் கருத்து கூற முடியாது.நான் தமிழகம் வருவதை யாராலும் தடுக்க முடியாது" என்றார்.

முழு பட்ஜெட் ஒரு நல்ல உதாரணம்
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- 13 ஆண்டுகள் கழித்து புதுவையில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பது மிகவும் பெருமையான விஷயம். இதற்காக முதல்வர் நிதித்துறையுடன் நான் இணைந்து செயல்பட்டேன். புதுச்சேரி முன்னேறி வருவதற்கு முழு பட்ஜெட் ஒரு நல்ல உதாரணம். இதை அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும். புதுச்சேரி ஆளுநர் மீது எந்த விமர்சனமும் வராது, தெலுங்கானா ஆளுநர் மீது வேண்டுமானால் விமர்சனம் வந்திருக்கலாம்.

இரவல் ஆளுநர் வேண்டுமா
புதுவை பல வழிகளில் முன்னேறி வருகிறது. இதற்கு இந்த பட்ஜெட் முன்னுதாராணம். இரவல் ஆளுநர் என்று விமர்சனம் செய்கிறார்கள். இரவல் ஆளுநர்தான் முழு நேர பட்ஜெட்டிற்கு ஏற்பாடு செய்து இருக்கிறார். மக்களை சந்திக்க ஏற்பாடு செய்து இருக்கிறார். தெலுங்கானாவில் இருந்து மருந்துகளை எடுத்துக்கொண்டு புதுவை கொடுத்தது எல்லாம் இந்த இரவல் ஆளுநர் தான். இரவல் ஆளுநர் வேண்டுமா..வேண்டாமா..என்பது அவர்களின் விருப்புரிமை கிடையாது.

கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறேன்
என்னை பொறுத்தமட்டில் இரவல் ஆளுநராக நான் இல்லை. இரக்கம் உள்ள ஆளுநராக நான் செயல்பட்டு கொண்டிருக்கிறேன். திமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் என்னை பாரட்டினார்கள். ஏனெனில், ஒரு மணி நேரம் எந்த பிசிறும் தட்டாமல் பாரதியாரையும் பாரதிதாசனையும் மேற்கோள் காட்டி முழுவதுமாக தமிழில் படித்து முடித்த உடனேயே திமுகவை சேர்ந்தவர்களும் பாராட்டினார்கள். கட்சி பாகுபாடு இன்றி நான் கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறேன்.

நான் கருத்து கூற முடியாது
அதனால் புதுவை ஆளுநர் இரவல் ஆளுநர் இல்லை. இரக்கம் உள்ள ஆளுநர். புதுவையை முன்னேற்றியே ஆக வேண்டும் என்று உழைக்கக் கூடிய ஆளுநர். தமிழகத்தை பற்றி நான் சொல்ல விரும்பவில்லை. அந்தந்த மாநில பிரச்சினைகளை அந்தந்த மாநிலத்தவர்களே பார்த்துக்கொள்ளட்டும். மற்ற மாநில விவகாரங்கள் குறித்து நான் கருத்து கூற முடியாது.

யாருமே தடுக்க முடியாது
நீங்கள் ஏன் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வருகிறீர்கள், நீங்கள் ஏன் என்.ஐ.டி வருகிறீர்கள் என்று ட்விட்டரில் கேள்வி கேட்கின்றனர். நான் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரலாம். ஒரு பெண்ணாக பெண்கள் தினத்திற்கு வருகிறேன். தமிழ்நாட்டிற்குள் நான் வருவதை யாருமே தடுக்க முடியாது. வேண்டும் என்றாலும் சரி.. வேண்டாம் என்றாலும் சரி.. ட்விட்டரில் என்னை எதிர்த்து பேசினாலும் சரி.. தமிழ்நாட்டிற்குள் தமிழிசை வந்து கொண்டு தான் இருப்பேன். அதைப்பற்றி கவலை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications