மழை, வெள்ளத்தால் தமிழக மக்கள் வலிகளை அனுபவித்தீர்கள்.. திருச்சியில் பிரதமர் மோடி வேதனை
திருச்சி: மழை, வெள்ளத்தால் தமிழக மக்கள் வலிகளை அனுபவித்தீர்கள் என திருச்சி விமான நிலைய திறப்பு விழாவில் பிரதமர் மோடி வேதனை தெரிவித்திருந்தார்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அவர் பேசுகையில் விஜயகாந்தை நாம் இழந்துவிட்டோம். விஜயகாந்த் நிஜத்திலும் கேப்டன்தான். சிறந்த தேசியவாதியாக திகழ்ந்தார்.

சினிமாவிலும் அரசியலிலும் கேப்டனாக இருந்தவர் விஜயகாந்த், திரைப்படங்களில் அவரது செயல்பாடுகள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அரசியல்வாதியாக தேசிய நலனில் அக்கறை கொண்டவர்.
அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மழை, வெள்ளம் காரணமாக தமிழக மக்கள் கடந்த ஆண்டு கடுமையான துயரத்தை அனுபவித்தீர்கள். அதிக வலியை அனுபவித்தீர்கள். இந்தத் துயரமான நேரத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது.
25 ஆண்டுகள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். வளர்ச்சி என்பது பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் பிரதிபலிப்புதான் தமிழகம். இங்குதான் திருவள்ளுவர் உள்ளிட்டோர் சிறப்பான இலக்கியங்களை படைத்துள்ளார்கள். திருச்சி என்று சொன்னாலே எல்லா இடங்களிலும் சிறப்பான விஷயங்கள் கொட்டி கிடக்கின்றன.
தமிழகத்திற்கு நான் வரும் போதெல்லாம் புதிய சக்தி எனக்கு கிடைக்கிறது. எனக்கு ஏராளமான தமிழ் நண்பர்கள் உண்டு. அவர்களிடம் இருந்து தமிழ் கலாச்சாரத்தை நான் கற்றுக் கொள்கிறேன். நான் எங்கு சென்றாலும் தமிழகத்தின் கலாச்சாரம் குறித்து பேச மறப்பதில்லை. எனக்கு தமிழ்மொழி, தமிழ் கலாச்சாரம் குறித்து உற்சாகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என மோடி பேசினார்.
-
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications