தயவு செய்து என் நண்பர்களை விசாரிக்காதீங்க.. லெட்டர் எழுதி வைத்துவிட்டு தூக்கில் தொங்கிய போலீஸ்காரர்
திருச்சி: என் சாவுக்கு யாரும் காரணம் அல்ல, எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன் என திருச்சி காவலர் தற்கொலை செய்து கொள்ளும் முன் கடிதம் எழுதியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் அழகர்சாமி (33). இவர் திருச்சி காவல்துறை மோப்பநாய் பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 2011ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் கே.கே நகரில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில் இவர் இன்று தனது வீட்டில் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த கே.கே நகர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அழகர்சாமி சாகும் முன்பு எழுதிய கடிதத்தை கைப்பற்றி போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் எழுதிய கடிதத்தில் 'என்னுடையை தற்கொலை முடிவுக்கு நானும், எனக்குள் ஏற்பட்ட காரணம் தெரியாத மன அழுத்தங்களே காரணம். அதனால், நான் இறந்த பிறகு, என்னுடன் பணிபுரிந்தகளையோ, பணிபுரிகின்றவர்களையோ, நண்பர்களையோ, உறவினர்களையோ புலன்விசாரணைக்கு உட்படுத்த வேண்டாம்''என்று கூறியிருக்கிறார்.
அழகர்சாமிக்கு திருமணம் ஆகவில்லை. வேறு எதாவாது காதல் விவகாரமா? அல்லது பணி அழுத்தம் காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications