நாள் முழுக்க உடன் இருந்தார்.. சுஜித் உடலை பார்த்து உடைந்து அழுத எம்பி ஜோதிமணி.. உருக்கம்!
குழந்தை சுஜித் உடலை பார்த்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உடைந்து கண்ணீர்விட்டு அழுதார்.
Recommended Video
திருச்சி: குழந்தை சுஜித் உடலை பார்த்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உடைந்து கண்ணீர்விட்டு அழுதார்.
குழந்தை சுஜித்தை மீட்பதற்காக 80 மணி நேரம் நடந்த போராட்டம் தோல்வியில் முடிந்துவிட்டது. 88 அடி ஆழத்தில் இருந்து நேற்று இரவு சுஜித் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரின் உடலில் இருந்து துர்நாற்றம் வந்ததை அடுத்து, சுஜித் உடல் ஆழ்துளை கிணற்றில் இருந்து தேசிய மீட்பு படை மூலம் வெளியே எடுக்கப்பட்டது. அவரின் கிராமத்திலேயே தற்போது சுஜித் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஆறுதலாக இருந்தார்
இந்த மீட்பு பணிகள் நடக்கும் போது, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி சுஜித்தின் அம்மாவுடன் நாள் முழுக்க உடன் இருந்தார். எல்லோரும் மீட்பு பணியில் கவனம் செலுத்தினார்கள். இதனால் சுஜித்தின் அம்மாவை சரியாக கவனிக்க யாரும் இல்லாத நிலை ஏற்பட்டது.

அம்மாவுடன் இருந்தார்
இதையடுத்து எம்பி ஜோதிமணி, சுஜித் அம்மாவுடன் இருந்து அவரை பார்த்துக் கொண்டார். அதேபோல் ஜோதிமணிதான் பாறைகளை குடைவதற்கு ரிக் மிஷினை பயன்படுத்துவதற்கு பதில், போர்வெல் போடுவதே சரியானது என்று ஐடியா கொடுத்தார். நேற்று பாறைகளை உடைக்க போர்வெல் இயந்திரம் பெரிய அளவில் பலன் அளித்தது.

பாறைகள் உடைப்பு
இதன் மூலம்தான் எளிதாக பாறைகள் உடைக்கப்பட்டு 65 அடி வரை தோண்டப்பட்டது. மீட்பு பணியை 2 நாட்கள் அங்கேயே இருந்து ஜோதிமணி கவனித்துக் கொண்டார். கட்சி பாகுபாடு பாராது அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் இணைந்து ஜோதிமணி தீவிரமாக பணியாற்றினார்.

அழுதார்
நேற்று இரவு சுஜித் உடல் மீட்கப்பட்ட போதும் கூட, ஜோதிமணி அங்குதான் இருந்தார். சுஜித் இறந்த செய்தி கேட்டு அங்கேயே நேற்று ஜோதிமணி உடைந்து அழுதுள்ளார். சுஜித்தை அம்மாவை தோளில் சாய்ந்து ஜோதிமணி ஆறுதல் கூறினார்.











Click it and Unblock the Notifications