10 பக்கம் படிச்சாலே தூக்கம் வருது.. எப்படி படிக்கிறீங்க.. ரஜினி என்னிடம் கேட்டார்.. சீமான் சொன்ன கதை
திருச்சி: நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி இருக்கிறார். புத்தகம் படிக்கும் போது 10 பக்கம் படித்தாலே தூக்கம் வருவதாக ரஜினிகாந்த் கூறியதாகவும், அதனை எப்படி சரி செய்வது என்று கேட்டதாகவும் கூறி இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த போது, அதனை முதல் ஆளாக எதிர்த்தவர் சீமான். தமிழ்நாட்டை தமிழரே ஆள வேண்டும் என்று முழங்கிய சீமான், ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்து வந்தார். ஆனால் அரசியல் பாதையில் இருந்து ரஜினிகாந்த் பின்வாங்கிய பின், சீமான் ரஜினிகாந்த் உடன் நட்பில் இருக்கிறார். அவ்வப்போது மரியாதை நிமித்தமாக ரஜினிகாந்தை சீமான் சந்தித்து வருகிறார்.

இந்த சந்திப்பின் போது என்ன பேசப்பட்டது என்பது தொடர்பாக சீமான் கூறியதில்லை. இந்த நிலையில் கடந்த முறை ரஜினிகாந்த் உடனான சந்திப்பின் போது என்ன நடந்தது என்று சீமான் பேசியுள்ளார். அதில் சீமான், எப்போது படிக்கிறது என்று ரஜினிகாந்த் கேட்டார். ஏனென்றால் நான் ஒரு புத்தகத்தை அவருக்கு பரிசாக கொடுத்திருந்தேன்.
அதற்கு நான், இரவு 11 மணிக்கு தூங்கிவிட்டேன் என்றால், 2 மணிக்கு முழிப்பு வரும்.. அப்போது கொஞ்சம் படிப்பேன்.. 4 மணி வரை படித்துவிட்டு மீண்டும் தூங்கிவிடுவேன். அதன்பின் காலை 6.30 மணி போல் உடற்பயிற்சிக்கு சென்றுவிடுவேன். ஒருவேளை தூக்கமே வரவில்லை என்றால், காலை 4 மணிக்கு எழுந்து படித்துவிட்டு அப்படியே பயிற்சிக்கு சென்றுவிடுவேன் என்றேன்.
அதற்கு ரஜினிகாந்த் சரியான நேரம் என்று பாராட்டினார். நான் 10 பக்கம் படித்தாலே தூக்கம் வந்துவிடுகிறது என்று கூறினார். அதற்கு நான், நல்லதுதான் என்று கூறினேன். அதனால் மாணவர்கள் படிக்க வேண்டும். அப்போதுதான் அறிவை வளர்த்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார். சீமானின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications