Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சொர்க்கவாசல் திறப்பு.. திருச்சிக்கு போக போறீங்களா.. அறிய வேண்டியவை

Subscribe to Oneindia Tamil

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா 10-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி திருச்சியில் நாளை முதல் ஜனவரி 11-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், " ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா 10-ந் தேதி நடைபெறுவதை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) பகல் 2 மணி முதல் 11-ந் தேதி (சனிக்கிழமை) பகல் 2 மணி வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

trichy srirangam temple

திருச்சி மத்திய பஸ்நிலையம், சத்திரம் பஸ்நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் வரும் நகர பஸ்கள் அண்ணாசிலை-ஓடத்துறை பாலம்-மாம்பழச்சாலை-காந்திரோடு- ஜே.ஏ.சி. கார்னர், இ.வி.எஸ். சாலை-ஸ்ரீரங்கம் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி, பின்பு ஸ்ரீரங்கத்தில் இருந்து அம்மாமண்டபம், மாம்பழச்சாலை, காவிரிபாலம், ஓடத்துறை, சத்திரம் பஸ் நிலையம் செல்ல வேண்டும்.

சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து லால்குடி, மண்ணச்சநல்லூர் மார்க்கம் செல்லும் நகர பஸ்கள் அண்ணாசிலை-ஓடத்துறை பாலம்- மாம்பழச்சாலை- திருவானைக்கோவில் டிரங்க்ரோடு- சோதனைசாவடி எண்.6- கொள்ளிடம் பாலம் வழியாக செல்ல வேண்டும். திரும்பி வரும்போது, திருவானைக்காவல் டிரங்க்ரோடு வழியாகவே சத்திரம் பஸ்நிலையம் வர வேண்டும். ஸ்ரீரங்கம் பஸ் நிலையம் செல்ல அனுமதியில்லை. அரசு சிறப்பு பஸ்கள் தேவைக்கேற்ப மட்டுமே ஸ்ரீரங்கம் பஸ்நிலையம் வர வேண்டும். கூடுதலாக வரும் பஸ்கள் காவல் சோதனைச்சாவடி-6 அருகில் நிறுத்தி வைக்க வேண்டும்.

சென்னை, அரியலூர், பெரம்பலூர், துறையூர் மற்றும் கடலூர் மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் சோதனைசாவடி-6-ல் இருந்து திருவானைக்காவல் வரக்கூடாது. அனைத்து பஸ்களும் சென்னை புறவழிச்சாலை வழியாக சஞ்சீவிநகர் செல்ல வேண்டும். சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் புறநகர் பஸ்கள் அனைத்தும் ஓடத்துறை, ஓயாமரிரோடு வழியாக சென்னை புறவழிச்சாலையில் சென்று வர வேண்டும். ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் பகுதிகளுக்குள் சரக்கு வாகனங்கள் வந்து செல்ல அனுமதியில்லை.

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவுக்கு வரும் மிக முக்கியநபர்கள் மாம்பழச்சாலை, அம்மாமண்டபம்ரோடு, ராகவேந்திராஆர்ச், பீட்-38 வந்து மேலவாசல் வழியாக மேல சித்திரைவீதி, மேல உத்திரைவீதி, வடக்கு உத்திரைவீதி, கிழக்கு உத்திரைவீதி, ரெங்கா, ரெங்கா கோபுரம் வந்து மிக முக்கிய விருந்தினர்களை இறக்கி விட்டு மீண்டும் கிழக்கு உத்திரை வீதியில் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

முக்கிய நபர்களுக்கான அனுமதிச்சான்று உள்ள வாகனங்கள் மாம்பழச்சாலை, அம்மாமண்டபம், ராகவேந்திராஆர்ச், மேலவாசல் வழியாக வந்து மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு சித்திரை வீதியில் நிறுத்த வேண்டும். பின்னர் வடக்கு சித்திரை வீதி வழியாக வடக்குவாசல் சென்று பஞ்சக்கரை வழியாக வெளியே செல்ல வேண்டும்.

இதர அனுமதிச்சீட்டு பெற்ற வாகனங்கள் மாம்பழச்சாலை, அம்மாமண்டபம், ராகவேந்திரா ஆர்ச், மேலவாசல் அருகே உள்ள மூலத்தோப்பு வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்த வேண்டும். சுவாமி தரிசனம் முடிந்த பின்னர் நெடுந்தெரு மந்தை, தசாவதாரம் சன்னதி வழியாக பஞ்சக்கரை சென்று வெளியே திரும்பி செல்ல வேண்டும்.

உத்திரை வீதி மற்றும் சித்திரை வீதியில் குடியிருப்போருக்கான வாகனங்கள் அனைத்தும் கிழக்கு மற்றும் வடக்கு சித்திரை வீதியில் நிறுத்த வேண்டும். காவல்துறை அதிகாரிகளின் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் கீழ சித்திரைவீதி மற்றும் தெற்கு சித்திரை வீதியில் மட்டும் நிறுத்த வேண்டும்.

trichy srirangam temple

வாகன அனுமதிச்சீட்டு இல்லாத பஸ்கள்: வாகன அனுமதிச்சீட்டு இல்லாத பஸ்கள் பால்பண்ணை-சஞ்சீவிநகர் சந்திப்பு- ஒய்ரோடு சந்திப்பு-காவல் சோதனைச்சாவடி எண்.6- பஞ்சக்கரை ரோடு வழியாக கொள்ளிடக்கரை வாகன நிறுத்துமிடத்தில் (யாத்ரீ நிவாஸ் எதிர்புறம்) வாகனத்தை நிறுத்திவிட்டு செல்ல வேண்டும். பின்னர் மீண்டும் அதேவழியில் வெளியே செல்ல வேண்டும்.

வேன்கள்: வேன்களில் வரும் பக்தர்கள் ஓடத்துறை பாலம் வழியாக, காவிரி பாலம், மாம்பழச்சாலை சந்திப்பு, திருவானைக்காவல் டிரங்க்ரோடு, ஸ்ரீஓட்டல், அம்பேத்கர்நகர், சங்கர் நகர் வழியாக சிங்கபெருமாள் கோவில் மைதானத்தில் வேன்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்துக்கு செல்ல வேண்டும். சுவாமி தரிசனம் முடிந்த பின்னர் அதே வழியாக வெளியே திரும்பி செல்ல வேண்டும்.

மாம்பழச்சாலை, அம்மாமண்டபம், ராகவேந்திரா ஆர்ச், மூலத்தோப்பு, தெப்பக்குளம் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு மீண்டும் அதே வழியாக திரும்ப வெளியே செல்ல வேண்டும். மாம்பழச்சாலை, திருவானைக்காவல் ஜங்ஷன், நெல்சன்ரோடு, ஸ்ரீமத்ஆண்டவன் கல்லூரி மைதானம் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு, பின்னர் பஞ்சக்கரை வழியாக திரும்ப வெளியே செல்ல வேண்டும். கொள்ளிடம்பாலம், பஞ்சக்கரைரோடு-யாத்ரி நிவாஸ்- கொள்ளிடம் முருகன் கோவில்- தெப்பக்குளம் வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு செல்ல வேண்டும். பின்னர் அதே வழியாக வெளியே செல்ல வேண்டும்.

ஆட்டோ: மாம்பழச்சாலை, அம்மாமண்டபம், ராகவேந்திரா ஆர்ச், மூலத்தோப்பு, நெடுந்தெரு வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு மீண்டும் அதேவழியாக திரும்ப வெளியே செல்ல வேண்டும்.

கொள்ளிடம்பாலம், பஞ்சக்கரைரோடு- யாத்ரிநிவாஸ்-தசாவதார சன்னதி-நெடுந்தெரு வாகனம் நிறுத்துமிடங்களில் நிறுத்திவிட்டு செல்ல வேண்டும். பின்னர் அதேவழியாக வெளியே செல்ல வேண்டும். மேலும் இந்த வருடம் சுமார் 3 லட்சத்துக்கும் மேல் பக்தர்கள் தரிசனத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு மாநகர போலீஸ் கமிஷனர் காமினி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+