சுஜித் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது... மண்ணுலகில் இருந்து விடைபெற்ற பாலகன்
Recommended Video
திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் சுஜித்தின் உடல் மணப்பாறை அருகே உள்ள ஆவாரம்பட்டி புதூர் கிராமத்தில் உள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு சிறுவனின் உடல் நேராக கல்லறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு கிறிஸ்துவ மத வழக்கப்படி இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு விண்ணுலக வாழ்க்கைகான பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.

நல்லடக்கம்
திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இருந்து 3 கி.மீ.தொலைவில் உள்ளே ஆவாரம்பட்டி புதூர் கிராமத்தில் உள்ள கல்லறையில் சிறுவன் சுஜித் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. வீட்டிற்கு கொண்டு செல்வதாக இருந்த திட்டம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் மாற்றப்பட்டது.

கல்லறை பிரார்த்தனை
சிறுவன் சுஜித் உடல் கிறிஸ்துவ மத சம்பிரதாயப்படி இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. பாத்திமா நகர் கல்லறையில் சுஜித் உடலை வைத்து பாதிரியார்கள் சிறப்பு பூசை(பிரார்த்தனை நடத்தினர்). அதில் நடுகாட்டுப்பட்டி சுற்றுவட்டார கிராமமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

வைக்கமுடியாது
சிறுவன் உடல் கடந்த 5 நாட்களாக மண்ணுக்குள் கிடந்ததால் அவனது உடல் சிதைந்து நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அதனை அஞ்சலிக்காக வைக்கமுடியாது என்பதால் துரிதமாக அடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கில் அமைச்சர்கள்
சிறுவன் சுஜித்தை நல்லடக்கம் செய்யும் வரை அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர். அவர்களும் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு சுஜித் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications