பாறைக்கு அடியில்.. அடகு கடையில்.. கிலோ கணக்கில் தங்கம்.. சுரேஷிடம் 7 நாட்கள் விசாரணை
சுரேஷை மீண்டும்7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
Recommended Video
திருச்சி: பாறைக்கு அடியிலே ஒன்றரை கிலோ தங்கம்.. இது போக அடகு கடையில ஆட்டைய போட்டது.. இப்படி நீள்கிறது சுரேஷின் கொள்ளை சமாச்சாரம்.. பஞ்சாப் நேஷனல் பேங்கில் கொள்ளை அடித்ததில், இன்னும் ஒன்னே முக்கால் கிலோ தங்கம் எங்கே மறைத்து வைத்திருக்கிறான் என்றே தெரியவில்லை.. இதை விசாரிக்க மேலும் ஒரு வார காலம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
லலிதா ஜுவல்லரி கொள்ளையன் திருவாரூர் சுரேஷிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோக திருச்சி பஞ்சாப் நேஷனல் பேங்க் கொள்ளை குறித்தும் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்னொரு குற்றவாளியான கணேசனை 13 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்திய போலீசார் அவர் லலிதா ஜூவல்லரி நகை ஒன்றரை கிலோ, வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட ஒன்றரை கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
இதில் சுரேஷூம் நிறைய பங்கு இருப்பதால்தான் விசாரணை அதிகமாக நடத்த வேண்டி இருந்தது. ஏற்கனவே 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட் அனுமதி அளித்தது.அப்போதுதான் பேங்கில் கொள்ளையடிக்கப்பட்ட உருக்கி வைத்திருந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
கணேசன், சுரேஷ் தந்த தகவலின்பேரில் 2கிலோ நகைககள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. சோழவந்தான் அருகே ஒரு பாறையின்கீழ் புதைத்து வைத்துள்ளதாக சுரேஷ் சொல்லவும், அதையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். ஆனால் இன்னும் ஒன்னே முக்கால் கிலோ தங்க நகைகளை பாக்கி உள்ளன.. அதை சுரேஷ் எங்கே வைத்திருக்கிறான் என்று தெரியவில்லை.
அதனால், திரும்பவும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கொள்ளிடம் போலீசார் முடிவு செய்தனர். இதற்காக ஸ்ரீரங்கம் கோர்ட்டில் அனுமதி கேட்டு, அதன்படி 7 நாள் விசாரணைக்கு அனுமதியும் தரப்பட்டுவிட்டது. கொள்ளிடம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதனையடுத்து கொள்ளிடம் போலீசார் சுரேசை ரகசிய இடத்தில் வைத்து மீதமுள்ள நகைகள் எங்கே, அவைகளை யாரிடம் விற்றனர் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இதைதவிர, மதுரை, பெங்களூர் ஆகிய இடங்களில் அடகுக்கடைகளிலும் சுரேஷ் கைவைத்திருக்கிறானாம். இந்த விவரங்களை எல்லாம் பெற எப்படியும் ஒரு வார காலம் ஆகும் என்கிறார்கள்!
-
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி












Click it and Unblock the Notifications