பாறைக்கு அடியில்.. அடகு கடையில்.. கிலோ கணக்கில் தங்கம்.. சுரேஷிடம் 7 நாட்கள் விசாரணை
சுரேஷை மீண்டும்7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
Recommended Video
திருச்சி: பாறைக்கு அடியிலே ஒன்றரை கிலோ தங்கம்.. இது போக அடகு கடையில ஆட்டைய போட்டது.. இப்படி நீள்கிறது சுரேஷின் கொள்ளை சமாச்சாரம்.. பஞ்சாப் நேஷனல் பேங்கில் கொள்ளை அடித்ததில், இன்னும் ஒன்னே முக்கால் கிலோ தங்கம் எங்கே மறைத்து வைத்திருக்கிறான் என்றே தெரியவில்லை.. இதை விசாரிக்க மேலும் ஒரு வார காலம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
லலிதா ஜுவல்லரி கொள்ளையன் திருவாரூர் சுரேஷிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோக திருச்சி பஞ்சாப் நேஷனல் பேங்க் கொள்ளை குறித்தும் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்னொரு குற்றவாளியான கணேசனை 13 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்திய போலீசார் அவர் லலிதா ஜூவல்லரி நகை ஒன்றரை கிலோ, வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட ஒன்றரை கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
இதில் சுரேஷூம் நிறைய பங்கு இருப்பதால்தான் விசாரணை அதிகமாக நடத்த வேண்டி இருந்தது. ஏற்கனவே 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட் அனுமதி அளித்தது.அப்போதுதான் பேங்கில் கொள்ளையடிக்கப்பட்ட உருக்கி வைத்திருந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
கணேசன், சுரேஷ் தந்த தகவலின்பேரில் 2கிலோ நகைககள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. சோழவந்தான் அருகே ஒரு பாறையின்கீழ் புதைத்து வைத்துள்ளதாக சுரேஷ் சொல்லவும், அதையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். ஆனால் இன்னும் ஒன்னே முக்கால் கிலோ தங்க நகைகளை பாக்கி உள்ளன.. அதை சுரேஷ் எங்கே வைத்திருக்கிறான் என்று தெரியவில்லை.
அதனால், திரும்பவும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கொள்ளிடம் போலீசார் முடிவு செய்தனர். இதற்காக ஸ்ரீரங்கம் கோர்ட்டில் அனுமதி கேட்டு, அதன்படி 7 நாள் விசாரணைக்கு அனுமதியும் தரப்பட்டுவிட்டது. கொள்ளிடம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதனையடுத்து கொள்ளிடம் போலீசார் சுரேசை ரகசிய இடத்தில் வைத்து மீதமுள்ள நகைகள் எங்கே, அவைகளை யாரிடம் விற்றனர் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இதைதவிர, மதுரை, பெங்களூர் ஆகிய இடங்களில் அடகுக்கடைகளிலும் சுரேஷ் கைவைத்திருக்கிறானாம். இந்த விவரங்களை எல்லாம் பெற எப்படியும் ஒரு வார காலம் ஆகும் என்கிறார்கள்!
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications