திருச்சி அருகே இன்ப அதிர்ச்சி தந்த சுங்கச்சாவடி ஊழியர்கள்.. வாகன ஓட்டிகள் அத்தனை பேரும் ஹேப்பி
திருச்சி : திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் திருமயம் அருகே லெம்பலக்குடியில் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் தீபாவளி போனஸ் கேட்டு கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் அந்த நிறுவனம் லெம்பலக்குடியில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு மட்டும் போனஸ் அளிக்க ஒப்புதல் தரவில்லை.. இதனால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக லெம்பலக்குடி சுங்கச்சாவடியில் வாகனங்கள் கட்டணம் இல்லாமல் சென்றன.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பல்வேறு அரசு நிறுவனங்கள் தீபாவளிக்கு போனஸ் அறிவித்து வருகின்றன. கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு ஒரு மாத போனஸ் வழங்கப்படுகிறது. அதேநேரம் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்த போனசும் அறிவிப்பது இல்லை.. அப்படித்தான் திருச்சி அருகே சுங்கச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படவில்லை.. அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் லெம்பலக்குடியில் சுங்கச்சாவடி அமைந்திருக்கிறது. இந்த சுங்கச்சாவடியில் தனியார் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இங்கு, முந்தைய காலக்கட்டததில் வழங்கப்பட்டதை போல சுங்கச்சாவடியில் பணியாற்றும் 32 ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை தீபாவளி போனசாக வழங்க நிறுவனத்திடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால் லெம்பலக்குடி சுங்கச்சாவடியில் மட்டும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பிய நிலையில் நிர்வாகத்தினர் முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கச்சாவடியில் உள்ள கட்டைகளை மேலே தூக்கி நிறுத்தி விட்டு, ஊழியர்கள் அமர்ந்திருக்கும் அறையை விட்டு வெளியேறி, சுங்கச்சாவடி அருகே உள்ள அலுவலகத்தில் அமர்ந்தார்கள். இதனால் சுங்கச்சாவடி வழியாக கடந்து சென்ற வாகனங்களுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. இதனால் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் செல்ல தொடங்கின.
இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாசில்தார் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பினருக்கும் சுமுகமான முடிவு ஏற்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று மாலை 3.45 மணிக்கு மேல் ஊழியர்கள் பணிக்கு திரும்பினார்கள். இந்த போராட்டம் காரணமாக திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் லெம்பலக்குடியில் சுங்கச்சாவடியில் சுமார் 20 மணி நேரமாக சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications