Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரியல் எஸ்டேட் துறை அசுர வளர்ச்சி? பத்திரப்பதிவு துறையில் நடந்த அதிரடி மாற்றத்தை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தமிழகத்தில் பத்திரப்பதிவுத் துறையில் கடந்தாண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு இதுவரை ரூ. 8,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. பத்திரப்பதிவுத் துறைக்கு அரசு ரூ.25,000 கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கூறினார்.

திருச்சி, தில்லைநகர், அரசு வணிக வளாகத்தில் புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நேற்று தொடங்கி வைத்தனர்.

TN Real estate sector booming? Have you noticed the drastic change in the registration department ?

திறப்பு விழாவைத் தொடர்ந்து வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், "பத்திரப்பதிவுத் துறையில் கடந்தாண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு இதுவரை ரூ. 8,000 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. பத்திரப்பதிவுத் துறைக்கு அரசு ரூ.25,000 கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வருவாய் இலக்கை அடைய ஏதுவாக, அதிகாரிகள் பணியாற்ற வேண்டியுள்ளது. பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் இடையூறு இல்லாமல் பணியாற்ற வசதியாக, இடைத்தரகர்கள், ஆவண எழுத்தர்கள் யாரும் அலுவலகத்திற்குள் வரக்கூடாது" என உத்தரவிட்டப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா. பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் இரா. வைத்திநாதன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அ.சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், ந.தியாகராஜன், துணை பதிவுத்துறை தலைவர் ராமசாமி, உதவி பதிவுத்துறை தலைவர் ராஜா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் த.ராஜேந்திரன், மண்டல தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த சார்பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ், திருச்சியில் செங்குளம், வரகனேரி, புத்தூர், பாண்டமங்கலம், உய்யக்கொண்டான் திருமலை மற்றும் திருச்சி மாநகராட்சியை உள்ளடக்கிய 12 வார்டுகள் அடங்கும். இதன் மூலம் சுமார் 2 லட்சம் பொதுமக்கள் பயன்படக்கூடிய வகையில், ஆண்டுக்கு 5 ஆயிரம் ஆவணங்கள் பதிவு செய்யவும், இதன் மூலம் அரசுக்கு ரூ. 52 கோடி வருவாய் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

TN Real estate sector booming? Have you noticed the drastic change in the registration department ?

பத்திரங்கள் பதியப்படும்போது பொதுமக்கள் அதிக நேரம் காத்திருக்காத வண்ணம் உடனுக்குடன் பத்திரங்களை பதிவு செய்யும் வகையில் 3.0 மென்பொருளை பயன்படுத்தி குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுத்து வரும் அரசு, கட்டிடங்களுக்கு உரிய விலையை நிர்ணயிக்க வேண்டும். நிலுவையில் உள்ள பத்திரங்களை உடனுக்குடன் முடித்து வருவாய் ஈட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் பத்திரப்பதிவு துறையில் ஆவணங்களை திருத்துவதை தடுக்கவும் அதிரடி நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது . ஆவணங்களை திருத்த முடியாத அளவிற்கு மென்பொருளையும் வடிமைத்துள்ளது. பத்திரப்பதிவு ஆவணங்கள் திருத்த முடியாத ஆவணங்களாக மாற்றப்படுவதால் போலி பத்திரப்பதிவு நடப்பது இயலாத காரியமாகிவிடும்.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு இதுவரை 8 ஆயிரம் கோடி அளவிற்கு அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரியல் எஸ்டேட் துறை வழக்கத்தை விட அசுர வளர்ச்சி அடைந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி அடைந்து இருந்தால்தான் இந்த அளவிற்கு வருவாய் அதிகரிப்பது சாத்தியம் என்று சொல்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+