திருச்சி திமுகவில் உச்சக்கட்ட உட்கட்சி மோதல்..திருச்சி சிவா வீடு மீது கல் வீசி தாக்குதல்..கார் சேதம்
திருச்சியில் ராஜ்யசபா எம்.பி மீது திமுகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி: திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவா வீட்டின் மீது திமுகவினர் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். சிவாவின் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தது. நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பபட்டுள்ளன. சிவா வீட்டின் முன்பாக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்படுள்ளது.
திருச்சி திமுகவில் அமைச்சர் கே.என். நேரு ஆதரவாளர்கள், திருச்சி சிவா ஆதரவாளர்களிடையே அவ்வப்போது முட்டல் மோதல் ஏற்படும். கடந்த 15 ஆண்டுகாலமாகவே திருச்சி திமுகவில் உட்கட்சி பூசல் வெடித்துக்கொண்டு இருக்கிறது.

ஒரே கட்சியில் இருந்த போதும், இருவருக்கும் இடையே மோதல், நீரு பூத்த நெருப்பாகவே உள்ளது. சிவாவை நேரு தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதனால் அவ்வப்போது சிவாவின் ஆதரவாளர்கள் நேருவின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது வாடிக்கையாக உள்ளது.
இன்றைய தினம் நடைபெற்ற ஒரு விழாவில் கே.என். நேரு பங்கேற்றார். சிவா வீட்டிற்கு அருகில் நடைபெற்ற விழாவில் ராஜ்யசபா எம்.பியான சிவாவின் பெயரை போடவில்லை என்றும், அவரை முறையாக அழைக்கவில்லை என்றும் சிவாவின் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்தனர். இந்த நிலையில் கே.என்.நேருவிற்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் சிவா வீட்டின் மீது கல்வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சிவாவின் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தது. நாற்காலிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனையடுத்து காவல்துறையினர் திருச்சி சிவா வீடு முன்பாக குவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சருக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications