வீட்டுக்கதவை தட்டி பெண்களை அழைக்கும் அரை நிர்வாண நபர்.. திருச்சி அருகே கொந்தளிக்கும் கிராமம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    வீட்டுக்கதவை தட்டி பெண்களை அழைக்கும் அரை நிர்வாண நபர்-வீடியோ

    திருச்சி: நள்ளிரவு நேரத்தில் கதவை தட்டி உடல் உறவுக்கு அழைக்கும் குடிகார தொழிலாளிக்கு எதிராக ஒரு கிராமமே ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்திய சம்பவம் திருச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது.

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கல்லாமேடு அருகே உள்ள கோட்டை பளுவஞ்சி பகுதி பெண்களுக்கு நூதனமான பிரச்சினை.

    இதே ஊரை சேர்ந்த சேர்ந்த தொழிலாளியால்தான் அத்தனை தொல்லையும்.

    குடிகாரர்

    குடிகாரர்

    அதே ஊரை சேர்ந்த தொழிலாளி ஒருவர் குடிபோதையால் நள்ளிரவில் அரை நிர்வாண கோலத்தில் ஒவ்வொரு வீடாகச் சென்று பெண்களை அழைப்பதாக கூறப்படுகின்றது.

    அரை நிர்வாணம்

    அரை நிர்வாணம்

    அரை நிர்வாண கோலத்தில் அழைப்பதை பார்க்கும் பெண்கள் அலறி அடித்துக் கொண்டு மீண்டும் வீட்டை பூட்டிக் கொள்ளும் சம்பவமும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

    பேருந்துகள் சிறை பிடிப்பு

    பேருந்துகள் சிறை பிடிப்பு

    இதுகுறித்து கோபமடைந்த ஊர்மக்கள், வளநாடு போலீசில் புகார் அளித்தும், சம்மந்தப்பட்ட தொழிலாளி மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி அந்த பகுதி மக்கள் இன்று காலை இரண்டு அரசுப் பேருந்துகளை சிறைபிடித்தனர். சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பேச்சுவார்த்தை

    பேச்சுவார்த்தை

    பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+