திருச்சியில் சூப்பர்- 32 பேருக்கு கொரோனா சிகிச்சை நிறைவு- கை தட்டி வழியனுப்பி வைத்தார் ஆட்சியர்!
திருச்சி: திருச்சியில் கொரோனா தொற்று நோய்க்கான சிகிச்சை முடிந்த 32 பேரை அரசு மருத்துவமனையில் இருந்து கை தட்டலுடன் வழி அனுப்பி வைத்தார் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு.
திருச்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருகை புரிந்த 3,045 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அனைவரும் நல்ல நிலையில் உள்ளனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் திருச்சியை சேர்ந்த 40 பேருக்கும் கரூர், அரியலூர், பெரம்பலூரைச் சேர்ந்த 3 பேருக்கும் என மொத்தம் 43 பேருக்கு கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களின் ரத்த பரிசோதனை பெறப்பட்டு 32 பேர் சிகிச்சை முடிந்து இன்று காலை 9 மணிக்கு அரசு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்.
இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு, மருத்துவமனை டீன் வனிதா ஆகியோர் பழங்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தும் கைகளை தட்டியும் விடை கொடுத்தனர். மருத்துவமனை ஊழியர்களும் இதில் பங்கேற்றனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் சிவராசு செய்தியாளரிடம் கூறியதாவது : திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 29 பேரும், கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று பேருக்கும் தற்போது நோய் பாதிப்பு முற்றிலும் சரி செய்யப்பட்டது. இந்த 32 பேரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தற்போது 67 வயது முதியவர் மற்றும்2 வயது குழந்தை உள்ளிட்டோர் நல்ல உடல் நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையின் சேவைக்காக நன்றியை தெரிவிக்கிறோம்.. தற்போது அனுப்பி வைக்கப்படும் 32 பேரும் வீடுகளில் 14 நாள் தனிமை படுத்தப்படுவார்கள் அதன் பின்னர் மருத்துவ சோதனை செய்து கொண்டு வழக்கமான பணியில் ஈடுபடுவர். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.
டிஸ்சார்ஜ் ஆன அனைவருக்கும் பழங்கள் மற்றும் அவித்த முட்டை, கொண்ட கடலை உள்ளிட்டவை கொடுத்து அவர் வழியனுப்பினர்.












Click it and Unblock the Notifications