Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சி பிரபலம் யார்? கொள்ளிடம் பாலத்தில், அதுவும் சிமென்ட் கட்டையில் பைக்கில்.. திணறிட்டாங்க ஜனம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி கொண்டிருக்கிறார்கள்.. ஒட்டுமொத்த திருச்சியையும் அலறவிட்ட இந்த இளைஞர் யார் என்று தெரியவில்லை. ஆனால், கடந்த 2 நாட்களாகவே, திருச்சியை கலங்கடித்தே பிரபலமாகிவிட்டார் இளைஞர்.

தமிழகத்தில் கடந்த 23ம் தேதி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது... இதையொட்டி திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது சிலைக்கு ஏராளமானோர் திரண்டு வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

Trichy Kollidam Bridge and Did the Young man ride bike in the Center Median of Kollidam bridge

இளைஞர்கள்: அப்போது இளைஞர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வந்திருந்தனர். திடீரென திருச்சிக்குள் புகுந்ததுடன், இந்த இளைஞர்கள் திருச்சி மக்களுக்கு நிறைய தொந்தரவுகளை தந்துவிட்டார்கள்.. அதிலும், புறநகர் பகுதிகளில் இவர்கள் செய்த அலப்பறைகளை கண்டு அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர் திருச்சி நகர மக்கள்.

இவர்களில் பல இளைஞர்கள் பைக்கில் வந்தார்கள்.. அப்போது, பைக்குகளில் வீலிங் செய்து பொதுமக்களுக்கு பீதியை தந்தார்கள்.. ஒருசில இளைஞர்கள், பஸ்களின் முன்பு தண்டால் எடுப்பது போல பாவ்லா செய்து பீதியை கிளப்பினார்கள்..

டான்ஸ் : மேலும் சில இளைஞர்கள், சாலையை முழுமையாக மறித்துக்கொண்டு டான்ஸ் ஆடினார்கள்..இதனால், கொள்ளிடம் பாலத்தில், போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.
இதில் உச்சக்கட்டமாக, இன்னொரு இளைஞர், கொள்ளிடம் பாலத்தின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் மேலேயே பைக்கை ஓட்டிச் சென்றார்.. மிகவும் ஆபத்தான இந்த பாதையில், டிவிஎஸ் 50-ஐ சர்ரென்று ஓட்டிச்சென்றார்.. கிட்டத்தட்ட 1.5 கிமீ தூரத்துக்கு இந்த டூவீலரை ஓட்டிச்சென்றார்... அதுவும், சர்க்கஸில் சாகசம் செய்வது போல, பைக்கை ஓட்டி செல்லவும், அந்த பைக்கின் முன்பக்கத்தில் நின்று அவரது இளைஞர்கள் அவரை ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள்..

வீடியோ: பொதுமக்கள் இதைப்பார்த்து பதறிப்போனார்கள். பின்னர் இந்த காட்சியை வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டனர். இந்த வீடியோதான், கடந்த 2 நாட்களாகவே வைரலாகி கொண்டிருக்கிறது.

பலவிதங்களில் தொந்தரவுகளை தந்து, தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய இந்த இளைஞர்களை போலீசார் ஏன் கண்டுகொள்ளவில்லை? ஏன் இன்னமும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? என்று இணையவாசிகள் கேள்விகளை கேட்க துவங்கிவிட்டனர்.

இதற்கு பிறகு, அந்த இளைஞர்கள் யார் என்பது குறித்த விசாரணையை போலீசார் தற்போது முன்னெடுத்துள்ளனர். அதிலும், கொள்ளிடம் பாலத்தில், சிமெண்ட் கட்டையில் பைக்கை ஓட்டிய அந்த "சாகச" இளைஞரை போலீசார் வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+