Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நகைகளை திருடி திருடி.. நடிகைகள் கழுத்தில் போட்டு.. அழகு பார்த்த முருகன் மாமா.. சுரேஷ் மாப்ளை!

நகைகளை தந்தே நடிகைகளை வலையில் விழவைத்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Lalitha Jewellery Theif Murugan story Revealed

    திருச்சி: நெக்லஸ்களை தந்தே நடிகைகளை கவிழ்த்துள்ளனர் மாமன் முருகனும், மருமகன் சுரேஷூம்.. இதில் சுரேஷை பெரிய ஆளாக்கி பார்க்க வேண்டும் என்பதுதான் முருகனின் லட்சியமாம்!

    லலிதா ஜுவல்லரி கொள்ளை நடந்தபோது, போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி கொண்டிருக்க மணிகண்டன்தான் முதலில் சிக்கினார். ஆனால், மெயின் கொள்ளையன் முருகனும், சுரேஷூம் சிக்கவே இல்லை. காரணம், நம் போலீசாரால் இவர்களை நெருங்க முடியவில்லை என்பதே உண்மை.

    இந்த கடுப்பில்தான் சுரேஷின் குடும்பத்தார்களுக்கு போலீசார் நெருக்கடி தந்துள்ளதாக தெரிகிறது. பெங்களூரில் இருந்த சுரேஷின் மனைவி, மற்றும் சொந்தக்காரர்களுக்கு நெருக்கடி தரவும் தலைமறைவாக இருந்த சுரேஷ் பதறி போய்விட்டான்.

    நெருக்கடி

    நெருக்கடி

    அதனால்தான், வேற வழியில்லாமல் செங்கம் கோர்ட்டில் வந்து சரணடைந்ததாக கூறப்படுகிறது. இதே காரணத்தை மையப்படுத்திதான் முருகனும் பெங்களூர் கோர்ட்டில் சரணடைந்தது. ஒருவளை போலீசார் இவர்களின் குடும்பத்தினருக்கு நெருக்கடி தராமல் இருந்திருந்தால், முருகனையும், சுரேஷையும் இதுவரை நம்மால் பிடித்திருக்கவே முடியாதுதான். கொள்ளை சம்பந்தமாக கோர்ட், கேஸ் என்று விசாரணை நடந்து வருகிறது.

    புலம்பல்

    புலம்பல்

    இந்நிலையில், திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில், சுரேஷ் இன்று ஸ்ரீரங்கம் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான். பிறகு வெளியே வந்த சுரேஷ் "இந்த வழக்கில் என் அம்மா, தம்பிக்கு கொஞ்சமும் இதில் சம்பந்தமே இல்லை.. தேவையில்லாமல் எங்க குடும்பத்துல18 பேரை போலீஸார் கைது செய்து சித்ரவதை செய்றாங்க.. "நீ மட்டும் சரணடைந்துவிடு.. உன் சொந்தக்காரங்களை விட்டுடறோம்"ன்னு சொன்னாங்க. அதை நம்பி சரணடைந்தேன்.. ஏமாந்துட்டேன்.. போலீசார் என்னை ஏமாத்திட்டாங்க.. சொன்னபடி செய்யல" என்று கதறினான்.

    உறுதி

    உறுதி

    இந்த சுரேஷ் மீது முருகனுக்கு தனிப்பட்ட பாசம் இருந்திருக்கிறது. சுரேஷை எப்படியாவது பெரிய ஆளாக்கிவிட வேண்டும் என்பதில் முருகன் உறுதியாக இருந்திருக்கிறான். சினிமாவில் ஹீரோவாக போட்டது முதல், கொள்ளை அடிப்பது வரை கூடவே வைத்திருந்து இருக்கிறான். நடிகைகளிடம் பேசும்போதுகூட, இருவரும் சேர்ந்துதான் நகைக்கடை வைத்திருக்கிறோம் என்று நகைகளை அள்ளி வீசி உள்ளனர்.. இருவருமே அதே நடிகைகளிடம் ஜாலியாகவும் இருந்துள்ளனர்.

    அடையாளம்

    அடையாளம்

    ஆனால், ஒருகட்டத்தில், நாம்தான் இப்படி ஆகிவிட்டோம். சுரேஷ் கொள்ளையனாக இருக்க கூடாது என்று முருகன் நினைத்துள்ளான். அதற்காக சுரேஷுக்கு பில்டிங் காண்டிராக்டர், ஹீரோ, பிசினஸ்மேன் என்ற அடையாளத்தை பெற்றுத் தர வேண்டும் கடுமையாக முயற்சி மேற்கொண்டதாகவும் சொல்கிறார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+