அண்ணாமலையால் பாஜகவிற்கு வந்தேன்.. ஆனால் சுயமரியாதை முக்கியம்.. திருச்சி சூர்யா சிவா கொடுத்த பதில்
திருச்சி: அண்ணன் அண்ணாமலை அவர்களால் ஈர்க்கப்பட்டுதான் நான் தமிழ்நாட்டு பாஜகவிற்கு வந்தேன்.. என் மேல் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை என திருச்சி சூர்யா சிவா ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக இருந்த திருச்சி சூர்யா சிவா நேற்று அந்த கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இது தொடர்பாக தமிழக பா.ஜனதா இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில தலைவர் சாய்சுரேஷ் குமரேசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில்," தமிழக பா.ஜனதா இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளர் திருச்சி எஸ்.சூர்யா, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால், மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என சாய்சுரேஷ் குமரேசன் கூறியிருந்தார்.
கடந்த 2022ம் ஆண்டும் திருச்சி சூர்யா சிவா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது நடந்தது என்ன பிரச்சனை என்றால், தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவுத் தலைவர் டெய்சி மற்றும் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளராக இருந்த திருச்சி சூர்யா சிவா இருவரும் அலைபேசியில் பேசிய ஆடியோ உரையாடல் வெளியாகியது. அதில் இருவரும் மிகவும் ஆபாசமாக பேசிக் கொண்டனர். இது சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த சம்பவம் தொடர்பாக இருவரிடமும் பாஜக மாநில தலைமை விசாரணை நடத்தும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். அதன்படி திருப்பூர் பாஜக அலுவலகத்தில் இருவரிடமும் பாஜக மாநில தலைமை அப்போது விசாரணை நடத்தியது. இதையடுத்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து அக்கா, தம்பி என பாசமாக பேட்டி அளித்தனர். எனினும் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி திருச்சி சூர்யா சிவா கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து 6 மாதத்திற்கு நீக்கப்படுவதாக அண்ணாமலை அறிவித்தார்.
இதனிடையே சிலமாதங்கள் கழித்து அண்ணாமலை உத்தரவின் பேரில் திருச்சி சூர்யா சிவா பாஜகவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். தமிழக பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக திருச்சி சூர்யா மீண்டும் பதவியில் தொடர்ந்தார்..
இந்நிலையில் திருச்சி சூர்யா சிவா, அண்மையில் சாட்டை துரைமுருகன் மற்றும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும திருச்சி சூர்யா சிவாவிற்கு கடும் பதிலடி கொடுத்தார்கள். திருச்சி சூர்யா சிவாவை பொறுத்தவரை அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக இருக்கிறார். அண்மையில் தமிழிசை சௌந்திரராஜன் பாஜக மாநில தலைமையை விமர்சித்தார்.
அதற்கு பதில் அளித்து திருச்சி சூர்யா சிவா பேசுகையில். தமிழிசை சௌந்தர்ராஜன் நீங்கள் மாநில தலைவராக இருந்தபோது ஒருவர் கூட கட்சியில் இணையவில்லை , நீங்கள் சொல்வது போல் பாஜகவில் ரவுடிகள் யாரும் இல்லை. மாநிலத் தலைவர் அண்ணாமலையை தாக்கி பேசும் திமுகவை நீங்கள் எதுவும் சொல்லாததால் நீங்கள் திமுக ஆதரவாளர் ஒன்று தோன்றுகிறது என கூறி இருந்தார். இது நேற்று நடைபெற்ற பாஜக மையக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பெரும் பிரச்சனையாக வெடித்தது. இதையடுத்தே கட்சியில் இருந்து திருச்சி சூர்யா சிவா நீக்கப்பட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில் தான் பாஜகவில் நீக்கப்பட்டது குறித்து திருச்சி சூர்யா சிவா ட்விட்டரில் ரியாக்சன் காட்டியுள்ளார். தனது பதிவில் அவர் கூறுகையில், அண்ணன் அண்ணாமலை அவர்களால் ஈர்க்கப்பட்டுதான் நான் தமிழ்நாட்டு பாஜகவில் இணைந்தேன். என் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் தலைவனை பேசியதற்கு நான் பதில் அளித்தேன், அதற்காக என்மேல் நடவடிக்கை என்றால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்.
எந்த நிலையிலும் அண்ணன் அண்ணாமலை அவர்களின் குடும்பத்தில் ஒருவனாகவே இருப்பேன். இனியும் தமிழ்நாடு பாஜகவில் பயணிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. சுயமரியாதை முக்கியம். எதன் பொருட்டும் அதை கைவிட முடியாது. என் மீது அன்பு கொண்டு எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள்" இவ்வாறு கூறியுள்ளார்.
-
அண்ணாமலை நேர்மையானவரா.. அரவக்குறிச்சியில் நடந்தது என்ன.. செந்தில் பாலாஜி சம்பவம் -
அவிநாசியில் முருகன்.. மத்திய அமைச்சராகும் மலை? ரூட் போடும் அண்ணாமலை! எகிறும் எதிர்பார்ப்பு! -
அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல் -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர் -
திருச்சி–சார்லப்பள்ளி சிறப்பு ரயில் சேவை ஜூன் வரை நீட்டிப்பு அறிவிப்பு -
மாஸ் லீடர்.. அண்ணாமலை பிம்பம் உடைந்ததா? எந்த தொகுதியா இருந்தால் என்ன? வென்று காட்ட முடியாதா? -
“ராகுல் காந்தி தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஜெயிக்கணும்னே நினைக்கலயா?”.. சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை -
தோல்வி பயம்.. அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் அதுதான்.. விளாசிய கனிமொழி! -
தங்கத்திற்கு தடை.. ரஷ்ய உத்தரவால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரபோகுது.. புடின் மெகா திட்டம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்!












Click it and Unblock the Notifications