டாப் கியர் போட்டு .. அடுத்தடுத்த வேலையில் குதித்த தினகரன்.. சூறாவளி பிரசாரத்தில் மும்முரம்
திருச்சியில் 3 நாள் சுற்றுப்பயணத்தில் டிடிவி தினகரன் ஈடுபட்டு வருகிறார்.
Recommended Video
திருச்சி: டாப் கியர் போட்டு அடுத்தடுத்த வேலையில் இறங்கி விட்டார் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்!!
ஆர்.கே.நகர் வெற்றிக்கு பிறகு எதை தொட்டாலும் தோல்வி, எங்கு திரும்பினாலும் தோல்வியேதான் தினகரகனுக்கு வாய்த்து வருகிறது.
அரசியல்வாதிகளிலேயே மிஸ்டர் கூல் என்று பெயரெடுத்த தினகரன், ஒவ்வொரு தோல்வியை கண்டும் துவண்டு சோர்ந்து விடாமல் அனைத்தையும் கடந்து வருகிறார்.
யாருடன் கூட்டணி
வரப்போகிற எம்பி தேர்தலில் யாருடனும் தினகரன் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பிக்கவில்லை. யாருடன் கூட்டணி வைக்கவும் விரும்பவில்லை போல தெரிகிறது. அதனால் தனித்து நிற்கலாம் என்றும், முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
குறிப்பிட்ட தொகுதிகள்
அப்படியே தனித்து நின்றாலும் எல்லா தொகுதிகளிலும் மல்லுக்கட்டி கொண்டு இருப்பதைவிட, எந்தெந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பதை அறிந்து அந்த குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தலாம் என முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
தேர்தல் கணிப்பு
அதற்காக சில தினங்களுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனம் சர்வே நடத்தி, 11 தொகுதிகளை தேர்வு செய்து தந்ததாகவும், அதில் பெரும்பாலும் டெல்டா மற்றும் தென்மாவட்டங்களே இடம் பெற்றிருந்தன என்றும் தகவல்கள் தெரிவித்தன.
திருச்சியில் முகாம்
இந்நிலையில், 3 நாட்கள் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார் டிடிவி தினகரன். இரண்டாம் தலைநகர் என்று சொல்லக்கூடிய திருச்சியிலேயே பெரும்பாலான அரசியல்வாதிகளை போலவே தினகரனும் களம் காண ஆரம்பித்துள்ளார். இன்று முதல் 4-ந்தேதி வரை 3 நாட்கள் திருச்சி மாநகர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க இருக்கிறார்.
3 நாள் பயணம்
இதற்காக நேற்றிரவே தினகரன் திருச்சிக்கு வந்துவிட்டார். இன்று மாலை 4 மணிக்கு இந்த சுற்றுப்பயணம் ஆரம்பமாகிறது. ஏற்கனவே திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் டிடிவி தினகரன் மக்களை சந்தித்து பொதுக்கூட்டங்களை நடத்தபோய்தான், அந்த தொகுதிகளில் அமமுக செல்வாக்கு ஓரளவு எட்டிப்பிடித்தது. இப்போது திருச்சியிலும் மக்களை நேரடியாக சந்திக்க புறப்பட்டு விட்டார், அமமுக தொண்டர்கள் குஷியாகி உள்ளனர்.
அடுத்தடுத்த வேலைகள்
திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் ரத்து, 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு, செந்தில் பாலாஜியின் கட்சி தாவல், அமமுகவுக்குள் புகைந்து வரும் உள்கட்சி பூசல் என எத்தனையோ குடைச்சல்கள் வரிசை கட்டி வந்து சென்றாலும், அவை அத்தனையையும் தட்டி தூக்கி எறிந்து விட்டு அடுத்தடுத்த வேலைகளில் இறங்கிவிடுவதுதான் தினரகனின் கெத்தே!!