மின்கோபுரத்தில் தொங்கிய உடல்.. திருச்சியில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர்கள் 2 பேர் பலி
திருச்சி: திருச்சியில் உயர் மின்கோபுர பராமரிப்பு பணி செய்தபோது திடீரென்று மின்சாரம் பாய்ந்ததில் 2 ஒப்பந்த ஊழியர்கள் பலியாகினர். இதில் ஒருவரின் உடல் மின்கோபுரத்தில் தொங்கியது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் கலாமணி மற்றும் மாணிக்கம். இவர்கள் 2 பேரும் கேகே நகர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தனர்.

கேகேநகர் ஓலையூர் ரிங்க் ரோடு அருகே உயர் மின்கோபுரம் உள்ளது. இங்கு இன்று பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக கலாமணி மற்றும் மாணிக்கம் ஆகியோர் சென்றனர்.
பராமரிப்பு பணியின் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகே கலாமணி, மாணிக்கம் ஆகியோர் பணியை தொடங்கி உள்னர். கலாமணி மின்கோபுரத்தின் மீது ஏறினார். மாணிக்கம் மின்கோபுரத்தில் கீழே நின்ற கலாமணிக்கு உதவி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்கோபுரத்தின் வயரில் மின்சாரம் பாய்ந்தது. கண்இமைக்கும் நொடியில் மின்சாரம் கலாமணியின் உடலில் பாய்ந்தது. மேலும் தீப்பிழம்பு ஏற்பட்ட நிலையில் கலாமணி மின்கோபுரத்திலேயே இறந்தார். அவரது உடல் மின்கோபுரத்தில் தொங்கியது.
அதேபோல் மின்கோபுரத்தின் கீழே நின்று கலாமணிக்கு உதவிய மாணிக்கம் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவரும் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடினார். இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவரும் பலியானார்.
இதுபற்றி அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்பு வாகனத்தின் ஏணியை பயன்படுத்தி 40 அடி உயரத்தில் தொங்கிய கலாமணியின் உடலை கைப்பற்றினர். கலாமணி மற்றும் மாணிக்கம் ஆகியோரின் உடல்கள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவர்களின் உடல்களை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இதில் மாணிக்கத்துக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் தான் ஆகிறது. மனைவி மற்றும் பெற்றோர்கள் உள்ளனர். குழந்தை இல்லை.
இதற்கிடையே மின்சாரம் தாக்கி 2 ஒப்பந்த பணியாளர்கள் இறந்தாலும் கூட மின்வாரிய அதிகாரிகள் யாரும் செல்லவில்லை. அதோடு பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்பட்ட பிறகு தான் இருவரும் பராமரிப்பு பணியை தொடங்கிய நிலையில் எப்படி இருவரும் மின்சாரம் தாக்கி இறந்தனர்? என்பது இன்னும் புரியாத புதிராக உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications