ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா - டிச.14ல் திருச்சியில் உள்ளூர் விடுமுறை
வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெறுவதை முன்னிட்டு திருச்சியில் வரும் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்.
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வரும் 14ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாக போற்றப்படுகிறது. இங்கு தமிழ்மாதங்கள் 12 மாதமும் திருவிழாதான் நடைபெறும். பிரம்மோற்சவம், தேரோட்டம், ஊஞ்சல் உற்சவம் என கோலாகலமாக நடைபெற்றும்.

மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி பெருவிழா கொண்டாடப்படுகிறது. கடந்த வாரம் திருநெடுந்தாண்டகத்துடன் விழா தொடங்கியது. சனிக்கிழமை முதல் பகல்பத்துவிழா நடைபெற்று வருகிறது.
நம்பெருமாள் தினசரியும் தங்க, வைர, முத்து நகைகள் சூடி அலங்காரமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நான்காம் நாளான இன்றைய தினம் நம்பெருமாள் அர்ஜூனா மண்டபத்தில் எழுந்தருளியதை ஏராளமான பக்தர்கள் ரங்கா ரங்கா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
வரும் 13ஆம் தேதி மோகினி அலங்காரத்தில் அருள்பாலிக்கும் நம்பெருமாள் 14ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசலில் எழுந்தருளுகிறார். இந்த நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வரும் 14ஆம் தேதி நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த விடுமுறையானது திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும், எனினும் பள்ளி/கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது.
இந்த விடுமுறை நாளில் அரசு அனைத்து துணைகருவூலங்களும், மாவட்ட கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும். இவ்விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வருகின்ற 18.12.2021 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications