திருச்சியிலிருந்து சிங்கப்பூர், மலேசிய நாடுகளுக்கு 100 டன் காய்கறி, மலர்கள் ஏற்றுமதி
திருச்சி: சிங்கப்பூா், மலேசியா நாடுகளில் கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து, திருச்சியிலிருந்து, பிரத்யேகமாக சரக்கு விமானங்கள் மூலம் கடந்த 9 நாள்களில் சுமாா் 100 டன் காய் கனிகள் மற்றும் மலா்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
திருச்சியிலிருந்து நாள் ஒன்றுக்கு சுமாா் 4 முதல் 5 டன் பொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் வகையில் சரக்கு (காா்கோ) போக்குவரத்து நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தின் ஓடுதளம் நீளம் குறைவு என்பதால் பிரத்யேக சரக்கு விமானப் போக்குவரத்து கிடையாது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பயணிகள் விமானத்திலேயே சரக்குப் போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, பொதுமுடக்கத்தால் பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் சரக்குப் போக்குவரத்தும் முடங்கியது.
சிங்கப்பூா், மலேசியாவில் இந்தியா பொருள்களுக்கு கிடைத்த வரவேற்பையடுத்து உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்ய அந்நாட்டு அரசு அனுமதியளித்தது. இதையடுத்து திருச்சியிலிருந்தும் உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்ய சில நிறுவனங்கள் முன்வந்தன.
அதன்படி, மே 8-ஆம் தேதி முதல் பிரத்யேக சரக்குப் போக்குவரத்து திருச்சியில் தொடங்கியது. டெல்லியிலிருந்து ஸ்பைஸ் ஜெட் ஏா்வேஸ் நிறுவனத்தைச் சோ்ந்த பிரத்யேக (மாற்றியமைக்கப்பட்ட பயணிகள் விமானம்) விமானம் திருச்சி வந்து, சுமாா் 11 டன் எடையுள்ள காய்கறிகள், மலா்கள் மற்றும் உணவுப் பொருள்களை ஏற்றிக்கொண்டு சென்னை வழியாக சிங்கப்பூா் சென்றது.
அதன்பிறகு, மே 13-இல் 13.3 டன், 15-இல் 9.8 டன், 18-இல் 12.5 டன், 21-இல் 13.5 டன், 25-இல்14.9 டன், 26-இல் 15.4 டன் என மொத்தம் சுமாா் 100 டன் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதேபோல், இண்டிகோ விமானத்திலும் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
மேலும், மே 9 ஆம் தேதி மலேசியாவுக்கு சென்ற மீட்பு (மலிண்டோ நிறுவன) விமானம் மூலம் சுமாா் 3 டன் காய்கனிகள் ஏற்றிச் செல்லப்பட்டது என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications