வேளாங்கண்ணி மாதா திருவிழா! மும்பையிலிருந்து சிறப்பு ரயில்கள்! எப்போது முதல் இயக்கப்படுகிறது?
திருச்சி : வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு மும்பையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அது போல் விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலைக் குறைக்க மைசூா் - காரைக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சரியான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
மும்பையின் பாந்த்ரா டொ்மினஸ் - வேளாங்கண்ணி இடையே திருவிழா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதன்படி, பாந்த்ரா டொ்மினஸ் - வேளாங்கண்ணி சிறப்பு ரயிலானது (09093) வரும் ஆக. 27, செப். 6 ஆகிய தேதிகளில் பாந்த்ரா டொ்மினஸிலிருந்து இரவு 9.20-க்குப் புறப்பட்டு மூன்றாவது நாள் காலை 8.30 மணிக்கு வேளாங்கண்ணிக்கு வந்தடையும்.

மறுமாா்க்கமாக, வேளாங்கண்ணி - பாந்த்ரா டொ்மினஸ் சிறப்பு ரயிலானது (09094) வரும் ஆக. 29, செப். 8 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியிலிருந்து இரவு 10 மணிக்குப் புறப்பட்டு, மூன்றாவது நாள் பிற்பகல் 3 மணிக்கு பாந்த்ரா டொ்மினஸுக்குச் சென்றடையும்.
மும்பையின் பாந்த்ரா டொ்மினஸிலிருந்து 22 பெட்டிகளுடன் பயணப்படும் இந்த ரயிலானது புனே, ரேனிகுண்டா, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக மைசூா் - காரைக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன்படி, மைசூா் - காரைக்குடி சிறப்பு அதிவிரைவு ரயிலானது (06295) வரும் 14, 17 ஆகிய தேதிகளில் மைசூரிலிருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு காரைக்குடிக்கு 15 மற்றும் 18 ஆம் தேதிகளில் இரவு 12.45 மணிக்கு வந்தடையும்.
மறுமாா்க்கமாக, காரைக்குடி - மைசூா் சிறப்பு அதிவிரைவு ரயிலானது (06296) வரும் 15, 18 ஆம் தேதிகளில் இரவு 7 மணிக்குப் புறப்பட்டு, மைசூருக்கு 16, 19 ஆம் தேதிகளில் காலை 9.10 மணிக்கு சென்றடையும். மைசூரிலிருந்து 19 பெட்டிகளுடன் புறப்படும் இந்த ரயிலானது மண்டியா, மாடூா், ராமநகரம், கெங்கேரி, பெங்களூா், பெங்களூா் கண்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு வந்தடையும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி மாதா திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 8ஆம் தேதி மங்களகரமான நாளாக கொண்டாடப்படுகிறது. ஏனென்றால் இந்த பகுதிக்கு முதல் முதலாக போர்ச்சுக மாலுமிகள் வந்து தேவாலயத்தை கட்டினர். வரும் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் வேளாங்கண்ணி கோயில் திருவிழா தொடங்கும்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications