வேளாங்கண்ணி மாதா திருவிழா! மும்பையிலிருந்து சிறப்பு ரயில்கள்! எப்போது முதல் இயக்கப்படுகிறது?
திருச்சி : வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு மும்பையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அது போல் விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலைக் குறைக்க மைசூா் - காரைக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சரியான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
மும்பையின் பாந்த்ரா டொ்மினஸ் - வேளாங்கண்ணி இடையே திருவிழா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இதன்படி, பாந்த்ரா டொ்மினஸ் - வேளாங்கண்ணி சிறப்பு ரயிலானது (09093) வரும் ஆக. 27, செப். 6 ஆகிய தேதிகளில் பாந்த்ரா டொ்மினஸிலிருந்து இரவு 9.20-க்குப் புறப்பட்டு மூன்றாவது நாள் காலை 8.30 மணிக்கு வேளாங்கண்ணிக்கு வந்தடையும்.

மறுமாா்க்கமாக, வேளாங்கண்ணி - பாந்த்ரா டொ்மினஸ் சிறப்பு ரயிலானது (09094) வரும் ஆக. 29, செப். 8 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியிலிருந்து இரவு 10 மணிக்குப் புறப்பட்டு, மூன்றாவது நாள் பிற்பகல் 3 மணிக்கு பாந்த்ரா டொ்மினஸுக்குச் சென்றடையும்.
மும்பையின் பாந்த்ரா டொ்மினஸிலிருந்து 22 பெட்டிகளுடன் பயணப்படும் இந்த ரயிலானது புனே, ரேனிகுண்டா, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக மைசூா் - காரைக்குடி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன்படி, மைசூா் - காரைக்குடி சிறப்பு அதிவிரைவு ரயிலானது (06295) வரும் 14, 17 ஆகிய தேதிகளில் மைசூரிலிருந்து இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு காரைக்குடிக்கு 15 மற்றும் 18 ஆம் தேதிகளில் இரவு 12.45 மணிக்கு வந்தடையும்.
மறுமாா்க்கமாக, காரைக்குடி - மைசூா் சிறப்பு அதிவிரைவு ரயிலானது (06296) வரும் 15, 18 ஆம் தேதிகளில் இரவு 7 மணிக்குப் புறப்பட்டு, மைசூருக்கு 16, 19 ஆம் தேதிகளில் காலை 9.10 மணிக்கு சென்றடையும். மைசூரிலிருந்து 19 பெட்டிகளுடன் புறப்படும் இந்த ரயிலானது மண்டியா, மாடூா், ராமநகரம், கெங்கேரி, பெங்களூா், பெங்களூா் கண்டோன்மென்ட், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு வந்தடையும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி மாதா திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 8ஆம் தேதி மங்களகரமான நாளாக கொண்டாடப்படுகிறது. ஏனென்றால் இந்த பகுதிக்கு முதல் முதலாக போர்ச்சுக மாலுமிகள் வந்து தேவாலயத்தை கட்டினர். வரும் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் வேளாங்கண்ணி கோயில் திருவிழா தொடங்கும்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications