Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொதல்ல சாப்பாடு போடுய்யா.. ஷூட்டிங் ஸ்பாட்டில் விவசாயிகள் சொன்னதைக் கேட்டு பதறி பரபரத்த விஷால்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் நடைபெற்று வரும் 'விஷால் 34' படப்பிடிப்பின்போது தன்னை சந்தித்த விவசாயிகளிடம் சாப்பிட்டீங்களா எனக் கேட்டு அவர்கள் இல்லை என்று சொன்னதால் பதறிப்போய், உடனே சாப்பாடு போடச் சொன்னார் நடிகர் விஷால்.

இயக்குநர் ஹ‌ரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் விஷாலின் 34வது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். கவுதம் மேனன், சமுத்திரக்கனி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

 Vishal get panicked after the farmers told to him in shooting spot

திருச்சி பகுதியில் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. தனது படங்களின் படப்பிடிப்பில் எப்போதும் கடைநிலை ஊழியர் தொடங்கி பெரிய நட்சத்திரங்கள் உட்பட அனைவருக்கும் ஒரே மாதிரி உணவு வழங்க வேண்டும் என்பதை நடிகர் விஷால் உறுதியாக கடைபிடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விஷால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்பகுதி மக்களையும், விவசாயிகளையும் சந்தித்தார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் நடிகர் விஷாலை சந்தித்தனர். அப்போது விவசாயிகளின் பிரச்சனைகள் மற்றும் அவர்களின் நலன் குறித்தும் கேட்டறிந்தார் விஷால்.

 Vishal get panicked after the farmers told to him in shooting spot

அப்போது அவர்களுடன் வந்திருந்த பெண் ஒருவரை பார்த்து விஷால் சாப்பிட்டிங்களாமா? என்று கேட்க, அதற்கு அந்தப் பெண் இல்லை என்று பதிலளித்தார். இதைக் கேட்டு பதறிப்போன விஷால், "ஏன் சாப்டல?" எனக் கேட்க, அதற்கு அந்தப் பெண் உங்களைப் பார்த்துவிட்டு சாப்பிடலாம் என்றார்.

அதற்குள் அருகில் இருந்த உதவியாளர் ஒருவர், "சாப்பாடு வாங்க போனாங்கணே.." எனச் சொல்ல, அவரைப் பார்த்து "முதல்ல சாப்பாடு போடுங்க" என்று காட்டமாக கூறினார் விஷால். முதலில் சாப்பிட்டுட்டு வாங்க எனக் கூறி அவர்களை சாப்பிட அனுப்பினார் விஷால். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது தீயாகப் பரவி வருகிறது.

அண்மையில், தீபாவளி பண்டிகை அன்றும் விஷால் 34 படத்தின் படப்பிடிப்பு திருச்சி பகுதியில் நடைப்பெற்று வந்த நிலையில், இந்தப் படத்தில் பணியாற்றும் அனைவருக்கும் நடிகர் விஷால் சார்பில் சமபந்தி கறி விருந்து அளிக்கப்பட்டது. உணவு அருந்தும் முன்னர் நடிகர் விஷால் மூன்று மதக் கடவுளையும் பிரார்த்தனை செய்து அதன் பின்னரே சாப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+