புதுப் பல்லு.. பிளாஸ்டிக் சர்ஜரி.. ஆளே பளபளப்பாக மாறிய திருவாரூர் திருடன் முருகன்.. அதிர்ந்த போலீஸ்
முருகனிடம் முழு விசாரணையை போலீசார் நடத்துவார்களா என்பது சந்தேகம்தான்
Recommended Video
திருச்சி: சங்கதி தெரியுமா.. கேங் லீடர் முருகன் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டானாம். ஆனா, இங்க சரணடையாமல், பெங்களூர் கோர்ட்டில் ஏன் இந்த கொள்ளையன் சரணடைய வேண்டும்?
லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கொள்ளை நடத்த, ஒரு வீட்டை வாடகைக்கு பிடிச்சு 2 மாசம் பிளான் போட்டது நாட்டின் மிக முக்கிய குற்றவாளி முருகன்தான்! அதனால் தமிழகம் மட்டுமில்லாமல், பெங்களூரிலும் போலீசார் முருகனை தேடி வந்தே இருந்தனர்.
முருகனை போலீசார் தேடி வந்த நிலையில் கண்ணில் சிக்காமல் போனதற்கு அவனது தோற்ற மாற்றமும் ஒரு காரணம் என்கிறார்கள். முருகனுக்கு எய்ட்ஸ் வந்து 5 வருடம் ஆகிறதாம். இப்போது உடம்பெல்லாம் மெலிந்து, பல் கொட்டி.. தோற்றமே மாறியது. ஆனால் போன வருஷம் முருகன் தன் முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக சொல்கிறார்கள்.

காரணம்
3 பல்லும் மாற்றி பல்செட் போட்டுள்ளார்களாம். அதனால், பழைய முருகனின் முகம் போல இப்போது இல்லை.. ஆள் அடையாளமும் தெரியவில்லை. அதனால் போலீசாரின் கண்ணில் மண்ணை தூவ இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.

நிலுவை
கொள்ளையடித்த மறுநாளே வீட்டை காலி செய்துவிட்டான். ஏற்கனவே இங்குதான் அதாவது பெங்களூரு பானசவாடி ஸ்டேஷனில் முருகன் மீது 83 கேஸ்கள் நிலுவையில் இருப்பதாக சொல்கிறார்கள். எனினும் இப்போது, அங்கேதான் போய் சரணடைந்துள்ளார். இதனால் தமிழக போலீசார் தங்கள் கஸ்டடியில் இனி முருகனை எடுத்து விசாரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி உள்ளது.

சரண்டர்
இப்படி சரண்டர் ஆகிவிடுவதற்கு முன்னமேயே முருகனை கைது செய்து விசாரித்துவிட வேண்டும் என்றுதான் நம் போலீசார் அதி தீவிரமாக செயல்பட்டனர். அப்போதுதான் தங்கள் பாணி விசாரணையை கையில் எடுத்து, முக்கால்வாசி விஷயத்தை போலீசாரால் வாங்கிவிட முடியும். ஆனால், சரண் ஆகிவிட்டால், கோர்ட் கட்டளைபடிதான் விசாரணையின் போக்கு இருக்கும். அதனால், தங்கள் பாணி விசாரணையை தமிழக போலீசார் கையாள முடியுமா என்பது சந்தேகம்தான். இதில், பெங்களூரு கோர்ட்டில் முருகன் சரணடைந்தது நம் போலீசாருக்கு மற்றொரு ஏமாற்றமே.

துப்பு
அது மட்டுமில்லை.. முருகன் பெங்களூருவில் பதுங்கி இருக்கலாம் என்று நம் போலீசாருக்கு ஒரு துப்பு அன்றே கிடைத்திருக்கிறது. அதன்படியே அங்கு சென்று தீவிர வேட்டை நடத்தியும், முருகனை கண்டுபிடிக்க முடியவில்லை.இதற்கு, ஒரு சில பெங்களூருபோலீசாரே முருகனுக்கு பதுங்க உதவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை அவர்கள் மட்டும் நமக்கு உதவியிருந்தால், முருகனை என்னைக்கோ கைது செய்து, தமிழக போலீசாரின் மாஸ் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கும். இந்த விஷயத்திலும் ஏமாற்றமே!

நம் போலீஸ்
இருந்தாலும், முருகனின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் நம் போலீசார் தூக்கிடவும், விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துவிடவும்தான் வேறு வழியில்லாமல் சரண்டர் என்ற முடிவுக்கு முருகன் வந்திருப்பதாக கருதுகிறார்கள். ஆனாலும் நம் போலீசார் விட்டுவிடுவார்களா என்ன.. எப்படியும் ஒட்டுமொத்த விஷயத்தையும் முருகனிடம் கறந்து.. உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தே தீருவார்கள்!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications