ஷவர்மா மீது மக்களுக்கு ஏன் மோகம்? அப்படி என்ன ருசி அதில்! விவரிக்கும் அரேபிய உணவு வகை உணவக நிறுவனர்!
திருச்சி: ஷவர்மாவை பொறுத்தவரை குறைந்த விலையில் அதிக புரதச் சத்துக்கள் அடங்கிருப்பதால் அதனை மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவதாக கூறுகிறார் அரேபிய உணவு வகை உணவக நிறுவனர் அப்துல் வாசிஹ்.
வெளியிடங்களில் சாப்பிடுவதற்கு முன்னர் உணவகங்களின் தரத்தையும், அங்கு பின்பற்றப்படும் தூய்மையையும் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற டிப்ஸ்களையும் வழங்குகிறார்.
இதனிடையே ஷவர்மாவை மையமாக வைத்து கடந்த சில நாட்களாக வட்டமடிக்கும் சர்ச்சைகள் குறித்து நாம் அவரிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது;

ஷவர்மா உணவு
''ஷவர்மாவை பொறுத்தவரை இது ஒரு அரேபிய உணவு வகை. அங்கிருந்து தான் இது உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. இந்தியாவை பொறுத்தவரை முதலில் கேரளாவில் ஷவர்மா அறிமுகமாகி இன்று நாடு முழுவதும் அதன் விற்பனை பரந்துவிரிந்துள்ளது.
எங்க கடையில் நாளொன்றுக்கு 35 கிலோ முதல் 40 கிலோ கோழிக்கறிகள் இதற்காக பயன்படுத்துகிறோம். எல்லாமே அன்றைய தினமே விற்றுத்தீர்ந்து விடுகிறது.''

விற்காத கடைகள்
''தினமும் ஷவர்மா விற்றுத்தீர்கிற கடைகளில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
ஏனென்றால் நாள்தோறும் தினமும் பிரஷ்ஷாக கறிகள் பயன்படுத்துவார்கள். எங்க கடையை பொறுத்தவரை ஷவர்மா செய்வதற்கான பிராசஸிங் நண்பகல் 12 மணி முதல்
மதியம் 1 மணிக்கு தொடங்குவோம். அப்போது தான் கறியில் மசாலா பிடிக்க சரியாக இருக்கும். இரவுக்குள் மொத்தமும் தீர்ந்துவிடும். இதனை இந்தளவு மக்கள் விரும்பி வாங்கி சாப்பிட காரணம் குறைந்த விலையில் அதிக புரதச் சத்து இருப்பதே ஆகும்.''

எதிர்பாராத நிகழ்வு
''கேரளாவிலும், தஞ்சை மாவட்டத்திலும் ஷவர்மா சாப்பிட்ட சிலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக ஊடகங்களில் அறிந்தேன். இது ஒரு துரதரிஷ்டவசமான நிகழ்வு.
இந்த நிகழ்வை காரணம் கூறி ஒட்டுமொத்தமாக ஷவர்மா என்ற உணவையே புறக்கணிக்கத் தேவையில்லை. ஆனால் இது போன்ற உணவு வகைகளை சாப்பிடச் செல்வதற்கு முன்னர், உணவகங்களின் தரம், தூய்மை, நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.''
Recommended Video

ஐயம் தேவையில்லை
''ஷவர்மா சாப்பிட்டால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு விடுமோ என மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஆனால் சரியான இடத்தில் வாங்கி சாப்பிட வேண்டும். கடை
ஹைஜீனிக்காக இருக்கிறதா என மட்டும் பார்க்காமல் அங்கு விற்பனை செய்யப்படும் உணவு வகைகளும் தரமாக உள்ளதா என்பதில் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க
வேண்டும். '' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications