ஊரடங்கு ஜூன் 30-ம் தேதிக்கு மேல் நீட்டிப்பா...? திருச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில்
திருச்சி: ஜூன் 30-ம் தேதிக்கு மேல் பொதுமுடக்கம் நீட்டிப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவெடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.
மேலும், தமிழக அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக நாட்டிலேயே கொரோனா இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவு எனத் தெரிவித்தார்.

முதல்வர் பேச்சு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் விவரம் உள்ளிட்டவைகளை பட்டியலிட்டார். மேலும், திருச்சி மாவட்டத்திற்கு அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.

உலக சுகாதார நிறுவனம்
அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே கொரோனாவுக்கு தீர்வு காண முடியாமல் தவிப்பதாகவும், அந்த நாடுகளில் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகம் என்றும் கூறினார். மேலும், உலக சுகாதார நிறுவனமும், ஐ.சி.எம்.ஆரும் கூறும் ஆலோசனைகளை தமிழக அரசு முழுமையாக செயல்படுத்தி வருகிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்த நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ஜூன் 30-ம் தேதி
ஜூன் 30-ம் தேதிக்கு மேல் பொதுமுடக்கம் நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்த பிறகே அது பற்றி முடிவெடுக்கப்படும் எனக் கூறினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மருத்துவத்துறை சார்ந்தது என்றும், இதில் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் முதலமைச்சர் இதனைக் கூறியது குறிப்பிடத்தக்கது.

முழுக்க முழுக்க
இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனை என்றால் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி பேசலாம், இது முழுக்க முழுக்க மருத்துவத்துறை சார்ந்தது என்றும், இதில் அரசியல் கட்சிகளிடம் பேசி செயல்படும் விவகாரம் இல்லை எனவும் முதல்வர் கூறினார். மருந்து கண்டுபிடித்தால் தான் கொரோனாவை ஒழிக்கமுடியும் என்றும், மருந்து கண்டுபிடிக்கும் வரை இந்நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிந்து, சுத்தத்தை பேணி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications