தூத்துக்குடியில் லிப்ட் கொடுத்த பாவத்திற்கு! இளைஞருக்கு சரமாரி அடி, உதை, அரைஞாண் கொடி கூட மிஞ்சலை!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் லிப்ட் கொடுத்த பாவத்திற்காக இரு சக்கர வாகன ஓட்டியை 6 இளைஞர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கி அரைஞாண் கொடி உள்பட அனைத்தையும் பறித்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் நேற்று நடந்துள்ளது.
ஒரு நபர் லிப்ட் கேட்டு வந்தார். வழியில் கத்தியை முதுகில் வைத்து கண்மாய் கரைக்கு வண்டியை விட சொன்னார். அப்போது அங்கு இருவர் வந்தனர். அவர்கள் இரண்டு பேரும் அந்த இளைஞரும் சேர்ந்து மிரட்டி கண்மாய்க்கு உள்ளே அழைத்துச் சென்ற போது அங்கு ஒரு 3 பேர் இருந்தனர். மொத்தம் 6 பேர் சேர்ந்து இந்த தாக்குதல், வழிபறி செயலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் எனது பைக்கிற்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு ஸ்டார்ட் செய்ய முயற்சித்தேன். அப்போது இளைஞர் ஒருவர் ஓடிவந்து, "எனது பேருந்தை தவறவிட்டுவிட்டேன். அதை பிடிக்க வேண்டும், கொஞ்சம் லிப்ட் கொடுங்கள்" என்றார்.
நானும் பார்ப்பதற்கு பாவமாக இருந்ததால் அவரை வண்டியில் ஏற்றிக் கொண்டேன். நடுவழியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் எனது முதுகிற்கு பின்னால் அந்த இளைஞர் கத்தியை வைத்து மிரட்டினார். உடனே என்னை அருகே உள்ள கண்மாய் கரைக்கு செல்லுமாறு மிரட்டினார். நானும் உயிருக்கு பயந்து அவர் சொன்னது போல் சென்றேன்.
அப்போது அங்கு மேலும் இரு இளைஞர்கள் வந்தனர். எனது வண்டியை நிறுத்திவிட்டு எனது டீசர்ட்டை பிடித்து இழுத்து உள்ளே அழைத்து சென்றார்கள். அங்கு இன்னும் ஒரு 3 பேர் இருந்தனர். மொத்தம் 6 பேர் சேர்ந்து என் கழுத்தில் இருந்த செயின், இடுப்பில் இருந்த அரைஞாண் கொடி, மோதிரம் உள்ளிட்டவற்றை பறித்துக் கொண்டனர்.
கொடூரத்தின் உச்சம்.. நெல்லை, தூத்துக்குடி செல்லும் நிவாரணப் பொருட்கள் வழிப்பறி! உடனே வந்த போலீஸ்
மேலும் எனது மொபைல் போனை பறித்த அந்த நபர்கள் எனது போனில் உள்ள போன் பே, ஜிபேயின் பாஸ்வேர்ட்டை கேட்டு அடித்தார்கள். நான் கொடுக்க மறுத்ததால் என்னை கடுமையாக அடித்துவிட்டு என் போனை மட்டும் பிடுங்கி கொண்டு சென்றனர். மேலும் என்னிடம் வண்டி சாவியை கொடுத்த அவர்கள், "திரும்பி பார்க்காமல் ஓடி போ" என்றார்கள்.
நான் அப்படியே கிளம்பி வந்துவிட்டேன். நான் அணிந்திருந்தது எல்லாமே வெள்ளி. 150 கிராம் மதிப்புடையதாக இருக்கும். அவர்கள் 6 பேரும் குடித்துவிட்டோ கஞ்சா போதையிலோ இல்லை, நன்றாக தெளிவாக இருந்தார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications