தூத்துக்குடி- நெல்லை பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! பாலருவி எக்ஸ்பிரஸ் வந்ததும் இப்படி ஒரு முடிவா
தூத்துக்குடி: கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வரை இயக்கப்பட்டு வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலானது பயணிகளின் கோரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டது. ரயில்வேயின் இந்த அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சியடைந்த நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்பட்டு வந்த பேசஞ்சர் ரயிலை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தென் மாவட்டத்தில் மிக முக்கிய தொழில் நகரமாக தூத்துக்குடி உள்ளது. துறைமுகம், விமான நிலையம், தொழிற்சாலைகள் எனை அனைத்தும் நிரம்பியுள்ளதால் பல்வேறு தேவைகளுக்காக தூத்துக்குடிக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தூத்துக்குடிக்கு அடுத்த படியாக திருநெல்வேலியும் மிக முக்கியமான நகரமாக உள்ளது.

இரு நகரங்களுக்கு இடையே உள்ள தொலைவு வெறும் 62 கிலோ மீட்டர் தான். மருத்துவ தேவை, கல்வி, தொழில் காரணங்கள் என பல்வேறு நோக்கத்திற்காக இரு நகரங்களுக்கு இடையேயும் பயணிகள் அதிக அளவில் பயணம் செய்கிறார்கள். ஆனால், தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே போதிய ரயில் போக்குவரத்து வசதி இல்லை. தற்போது ஒரே ஒரு பேசஞ்சர் ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 15 முதல் பாலக்காட்டில் இருந்து வரும் பாலருவி ரயிலும் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாலக்காட்டில் பிற்பகல் 4.05 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு அதிகாலை 4.40 மணிக்கும், தூத்துக்குடிக்கு 6.40 மணிக்கு வந்து சேரும். பயணிகளின் பல ஆண்டு கால கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே பாலருவி ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்துள்ளது. இதனால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், தற்போது ரயில்வே வெளியிட்டு இருக்கும் ஒரு அறிவிப்பு பயணிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அதாவது, திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்பட்டு வந்த பேசஞ்சர் ரயில் வரும் 19 ம் தேதி முதல் ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடிக்கு இரவு 9.20 மணிக்கு இந்த ரயில் வந்து சேரும். தாழையூத்து, கங்கை கொண்டான், வாஞ்சி மணியாச்சி, கைலாசபுரம், தட்டப்பாரை, மீளவிட்டான், தூத்துக்குடி மேலூர், வழியாக தூத்துக்குடிக்கு இயக்கப்பட்டு வந்தது.
அதேபோல தூத்துக்குடியில் இருந்து மாலை 6.25 மணிக்கு புறப்பட்டு இரவு 8.25 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த நிலையில், இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை எனக் கூறி ரயில்வே ரத்து செய்துள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்த பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டு இருப்பது பயணிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. பாலருவி எக்ஸ்பிரஸ் இயங்கும் வழித்தடத்தில் ரயிலின் நேரத்தை மாற்றி இயக்கினால் பயணிகளுக்கு பெரும் வசதியாக இருக்கும் என்பதால் ரத்து செய்வதை ரயில்வே நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
-
இதையா கொடுத்தாங்க? தாம்பூலப் பையை திறந்து பார்த்த உறவினர்கள் ஷாக்! திருநெல்வேலியில் அந்த சம்பவம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications