சாத்தான்குளம் சம்பவம்.. 5 காவலர்களை விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சிபிஐ
தூத்துக்குடி: சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக முதலில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களை விசாரிக்க சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர், இரு சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை தாமாக முன் வந்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை விசாரணை நடத்தியது. இதையடுத்து சிபிஐ விசாரணைக்கு எடுப்பதற்கு முன்னர் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், இரு சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.
அதன்படி அவர்களிடம் விசாரணை நடத்த மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications