இரட்டை இலக்க தொகுதிகள் டார்கெட்.. ஆரம்பத்திலேயே அலறவிடும் சிபிஎம்.. அதிர்ச்சியில் அறிவாலயம்
தூத்துக்குடி: 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவி வருகிறது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதிகள், பிரச்சாரம், கட்சி மாறுதல் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளதாக சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ. சண்முகம் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம், "இந்திய வரலாற்றிலேயே இவ்வளவு மோசமான பட்ஜெட் இதற்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டதில்லை. இந்தியாவின் எந்த பிரிவு மக்களுக்கும் எந்த நல்லதும் செய்யாத மோசமான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அநேகமாக அனைத்து பகுதி மக்களும் இந்த நிதி நிலையை கண்டித்து தங்களின் குரலை பதிவு செய்து வருகிறார்கள்.

விஜய் இப்படி பண்ணலாமா
இதைக் கண்டிக்காத ஒரே தலைவர் விஜய் மட்டும் தான். ஒரு தேசத்தில் நிதி நிலை அறிக்கை என்பது அடுத்த ஓராண்டிற்கு அரசாங்கம் என்ன செய்ய போகிறது என்பதற்கான ஒரு அறிவிப்பு நடவடிக்கை. ஒரு கட்சியின் தலைவராக இருந்து கொண்டு, அடுத்து நான் தான் முதலமைச்சர் என்று சொல்லி கொண்டும் விஜய் நிதி நிலை அறிக்கை பற்றி எதுவும் சொல்லாமல் வேறு எதை எதையோ பேசி வருகிறார்.
அவர்தான் முதலமைச்சராக துடித்து கொண்டிருக்கிறார். இதற்கு ஒரு தரப்பு மக்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என்பது வருத்தமான விஷயம். சின்ன சின்ன கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கூட இதை கண்டிக்கிறார்கள். விஜய் நிதிநிலை அறிக்கையை ஆதரித்து கூட கருத்து சொல்லட்டும். ஆனால் எந்தக் கருத்தும் சொல்லாமல் இருப்பது நியாயமில்லை. கூட்டணி தொடர்பாக திமுகவில் இன்னும் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படவில்லை.
இரட்டை இலக்க தொகுதிகள்
வழக்கமாக திமுக பேச்சுவார்த்தைக் குழு மூலமாகத்தான் மற்ற கட்சிகளுடன் பேசுவார்கள். ஆகவே திமுக பேச்சுவார்த்தை குழு அமைத்த பிறகு எங்களின் குழு சென்று பேச்சுவார்த்தை நடத்தும். திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் நாங்கள் எத்தனை தொகுதிகள் கேட்கிறோம், என்னென்ன தொகுதிகள் வேண்டும் என்கிற விபரத்தை கேட்போம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட தீர்மானித்துள்ளது என்பதை ஏற்கனவே கூறியுள்ளேன்.
தனால் இந்தமுறை திமுகவிடம் இரட்டை இலக்க தொகுதிகளை கேட்டுப் பெற எல்லாவிதமான முயற்சிகளையும் செய்வோம். 234 தொகுதிகளிலும் எந்த தொகுதியில் நின்றாலும் நாங்கள் வெற்றி பெறுவோம். இதில் தென் மாவட்டம், வட மாவட்டம் என்று பிரிக்கவில்லை. திமுக தலைமையிலான கூட்டணி மிகவும் வலிமையானது. இவற்றில் 234 தொகுதிகளில் எங்கு யார் நின்றாலும் வெற்றி பெறுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை" என்றார்.
-
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
இந்திய கம்யூனிஸ்ட் நினைச்சது நடக்குமா? திமுக கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு -
விசிகவுக்கு 7 தொகுதிகள்.. தேமுதிகவுக்கு எவ்வளவு? நாளை தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக! -
திமுகவை காலி செய்ய விஜய் போதும்! எடப்பாடியிடம் சொன்ன பியூஷ் கோயல்! கான்ஃபரன்ஸ் காலில் 3வது நபர் யார் -
கன்னியாகுமரியில் 6 தொகுதிகள் நிலவரம் என்ன? 5ல் முந்தும் திமுக கூட்டணி.. விஜய்யால் பாஜகவுக்கு சேதாரம் -
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
2021ல் திமுக vs அதிமுக.. வாக்கு வித்தியாசம் வெறும் 5.7% தான்.. கேம்சேஞ்சரான நாதக, அமமுக, கமல்ஹாசன்! -
மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக் -
சரத்குமார் அந்த கட்சிக்கு போகப் போறாரா? பாஜகவில் பொறுத்து பொறுத்து பார்த்து.. திமுகவுக்கு ஹேப்பி போல -
கூடுதல் தொகுதிகள்.. கறார் கம்யூனிஸ்ட்.. அதிர்ச்சியில் அறிவாலயம்.. தொடரும் இழுபறி












Click it and Unblock the Notifications