DMK Congress: திமுக கூட்டணியில் தேமுதிக இன்! காங்கிரஸ் out? கனிமொழி சொன்ன பதிலை பாருங்க!
தூத்துக்குடி: திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைத்திருக்கும் மாற்றத்திற்கு வாய்ப்பு இல்லை என தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேட்டி அளித்துள்ளார். காங்கிரஸுக்கு பதிலடி கொடுக்கத்தான் தேமுதிகவை திமுக கூட்டணியில் இணைத்துள்ளார்கள் என பேச்சு பரவலாக இருந்து வரும் நிலையில் கனிமொழி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவரிடம் இடைக்கால பட்ஜெட்டில் எதிர்காலத் திட்டங்கள் எதுவுமில்லை எனக் கூறி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தது குறித்த கேள்விக்கு, "பொதுவாக இடைக்கால பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகளும் வருவதில்லை.
இருப்பினும், அவர் அதை முறையாகப் படித்துப் பார்த்தால், இளைஞர்களின் எதிர்காலத் தேவைகள், விளையாட்டு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான முக்கிய அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஏதாவது ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றுவது சரியானதாக இருக்காது" என்றார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பாஜக கூறி வருவது குறித்த கேள்விக்கு, "பாஜக தனது கூட்டணியைச் சரியாக வைத்துக் கொண்டாலே போதும்; அவர்கள் ஏன் மற்ற கூட்டணிகளைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள் எனத் தெரியவில்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாக பலமாக நிலைத்திருக்கும் ஒரு கூட்டணி. இதில் எந்தவித மாற்றமும் வருவதற்கு வாய்ப்பே இல்லை.
மாநிலத்தையே கொண்டு போய் அடகு வைத்தவர் தான் எதிர்க்கட்சித் தலைவர். இன்னைக்கு நேற்று அல்ல; திமுகவின் அடிப்படை கொள்கையே 'மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்பதே. ஒருவேளை அவருக்கு இது தெரியாமல் இருக்கலாம்" என்று கனிமொழி விமர்சித்தார்.
திமுக கூட்டணியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. அதற்கு முன்பு விட்டு விட்டு கூட்டணி அமைத்திருந்தாலும் 2014 ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளாக தொடர்ந்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் பயணித்து வருகிறது.
இந்த நிலையில் அண்மைக்காலமாக திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்படுவது போல் சில நிர்வாகிகளின் பேச்சுகள் இருந்தன. அதிலும் குறிப்பாக மாணிக்கம் தாகூர், திமுகவின் பழைய தோல்விகள் குறித்து பேசுவதும் அதற்கு திமுகவினர் பதிலடி கொடுப்பதும் என இருந்தது.
கடந்த மாதம் டெல்லியில் காங்கிரஸ் தலைமையுடன் நடந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பலரும் தவெகவுடன் கூட்டணிக்கு செல்லலாம் என்றனராம். ஆனால் ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், தவெகவுடன் கூட்டணிக்கு செல்வது என்பது தற்கொலை முயற்சிக்கு சமம் என்பதால் திமுக கூட்டணியிலேயே தொடர்வதுதான் நல்லது என்றனராம்.
இதை ஏற்ற காங்கிரஸ் தலைமை, கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டாம் என்ற உத்தரவிட்டது. ஆனாலும் மாணிக்கம் தாகூர், அவரது ஆதரவாளர்கள் திமுகவை அதிகார திமிர் என்றெல்லாம் விமர்சித்துதான் வந்தனர்.
இந்த நிலையில்தான் திமுக - காங்கிரஸ் இடையே கூட்டணியில் பிளவு இல்லை என கனிமொழி தெரிவித்துள்ளார். அது போல் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதால் தற்போது மாணிக்கம் தாகூரும் இந்த கூட்டணியை உறுதி செய்துள்ளார்.
-
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்! -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
3 புது முகங்கள்.. சில எதிர்பார்க்காத சாய்ஸ்.. காங்கிரஸ் வேட்பாளர்கள்.. 27 பேரின் ரியல் பின்னணி -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்?











Click it and Unblock the Notifications