தலைவர்களை தேடாதீர்கள்... மக்களே நீங்கள் தான் தலைவர்கள்... கமல்ஹாசன் பிரச்சாரம்
ஒட்டப்பிடாரம்: தலைவர்களை தேடாதீர்கள்; நீங்கள் தான் தலைவர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் காந்தியை ஆதரித்து, கமல்ஹாசன் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். புதுக்கோட்டை, அந்தோனியார் புரம், ஒட்டப்பிடாரம், புதியம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், 4 தொகுதி இடைத்தேர்தல் விளையாட்டிற்கு காயாக மக்களை அரசியல்வாதிகள் நகர்த்துகிறார்கள் என்று விமர்சனம் செய்த கமல்ஹாசன், பல கட்சிகள் பணம் கொடுக்கிறார்கள்; அந்தப் பணம் அவர்களுடையது அல்ல என்றும் கூறினார்.
நீங்கள் பெரிய தியாகம் எதையும் செய்ய வேண்டியதில்லை என்றும் காசுக்கு மயங்காமல் போட வேண்டிய இடத்தில் சரியாக ஓட்டு போட்டால் போதும், நாளை நமதே என்றார்.












Click it and Unblock the Notifications