சென்னை, பெங்களூர், தூத்துக்குடி விமான பயணிகளே.. கால் டாக்சியை கேன்சல் பண்ணுங்க
தூத்துக்குடி: டிட்வா புயல் காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு மற்றும் பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு விமான சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்க கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளிட்ட கடலோர மாவட்டம் மற்றும் உள் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரமாக பலத்த மழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.

விமான நிலையம் அமைந்துள்ள வாகைகுளம் பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதை தொடர்ந்து மோசமான வானிலை மற்றும் விமான நிலைய ஓடு பாதையில் மழை நீர் தேங்கியுள்ளதால் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு இன்று காலை முதல் இயக்கப்பட வேண்டிய ஐந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், பெங்களூருவில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இயக்கப்பட வேண்டிய விமான சேவையும் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது .
விமான சேவை ரத்து காரணமாக விமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விமான பயணிகளின் பாதுகாப்பு மற்றும் மோசமான வானிலை காரணமாக இந்த விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்போர்ட் போக கால் டாக்சி புக் செய்யாமல் மாற்று வழியை யோசியுங்கள் பயணிகளே. நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரியப்படுத்துங்கள்.
கடந்த சில நாட்களாக டிட்வா புயல் தீவிரம் காட்டுவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் அவசர சேவை மற்றும் மீட்புத் துறைகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களை தேவையற்ற பயணம் செய்யாமல் பாதுகாப்பாக இருப்பதை கவனிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications