சோதனையில் ஒன்றையும் கைப்பற்றவில்லை.. அச்சுறுத்துவதற்காகவே சோதனை- கனிமொழி விளக்கம்
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடியிலும் தேர்தலை நிறுத்த சதி திட்டத்தின் ஒரு பகுதியாகவே என் வீட்டில் சோதனை செய்துள்ளனர் என திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி வீடு எடுத்து தங்கியுள்ளார். அங்கு அவருக்கு அலுவலகமும் உள்ளது. நேற்று இரவு 10 பேர் கொண்ட வருமான வரித் துறையினர் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் கனிமொழி பேசுகையில், 8.30 மணிக்கு வருமான வரித் துறையினர் எனது வீட்டுக்கு வந்தனர். அப்போது சோதனை செய்ய வேண்டும் என கூறினர். ஆதாரம் இருக்கிறதா என கேட்டேன். இந்த நேரத்தில் சோதனை செய்யலாமா என கேட்டேன்.

புறம்பானது
மேலும் சோதனை நடத்திய இடத்தில் எனக்கு சம்மன் கொடுத்தார்கள். இது சட்டத்துக்கு புறம்பானது. ஒரு மணி நேர சோதனைக்கு பிறகு இங்கு எதுவுமே கிடைக்கவில்லை என்பதை அவர்களே ஒப்புக் கொண்டபின் திரும்பி சென்றுவிட்டனர்.

தேர்தல்
வேலூரில் தேர்தலை நியாயமற்ற முறையில் நிறுத்திவிட்டது போல் இதைக் காரணமாக வைத்துக் கொண்டு, தோல்வி பயத்தால் இங்கும் தேர்தலை நிறுத்தலாம் என்ற நப்பாசையில் வந்தனர். ஆனால் அவர்களது ஆசை நிராசையாகிவிட்டது.

வீட்டில்
இது போன்ற சோதனைகளுக்கெல்லாம் திமுகவினர் அஞ்சமாட்டார்கள். இனிமேல் தான் தொண்டர்கள் உத்வேகமாக செயல்படுவார்கள். எந்தவித அடிப்படையும் இல்லாமல் எங்கள் வீட்டில் சோதனை நடத்தியுள்ளார். தோல்வி பயத்தால் தூத்துக்குடியில் தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறார்கள். திமுக மீது அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்றே பழி போடுகிறார்கள்.

மோடியுடன்
தேனி அதிமுக வேட்பாளர் வீடு, தமிழிசை வீட்டில் ஆகியோர் வீட்டில் கோடி கோடியாக பணம் உள்ளது. அங்கு சோதனை நடத்தாதது ஏன்? தேர்தல் ஆணையமும் மோடியுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தி வருகிறது. ஆனால் எங்கள் தொண்டர்கள் இனிமேல்தான் உற்சாகமாக செயல்படுவார்கள் என கனிமொழி தெரிவித்தார்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications