Kulasai Dasara: குலசேகரன்பட்டினத்தில் களைகட்டும் தசரா திருவிழா.. நாளை முதல் கலைநிகழ்ச்சிகள் ஆரம்பம்!
தூத்துக்குடி: குலசை தசரா திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது. இன்று 7 ஆம் திருநாள் கொண்டாடப்படும் நிலையில், இன்று இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா வருகிறார். தற்போது தசரா குழுக்களின் கலைநிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளதால் குலசை சுற்றுவட்டார பகுதிகள் களை கட்டியுள்ளது. சுற்றிலும் உள்ள ஊர்களில் திரும்பும் திசையெல்லாம் வண்ணவிளக்குகள், அலங்கார லைட்கள் கட்டி, சுமார் 20 கிலோமீட்டர் சுற்றளவு ஊர்களில் திருவிழா களைகட்டியுள்ளது.
இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் குலசேகரன்பட்டினத்தில்தான் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

இன்று 7 ஆம் திருநாள்
திருவிழா நடைபெறும் 10 நாட்களும் பல்வேறு கோலங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். 5 ஆம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் காமதேனு வாகனத்தில் நவநீத கிருஷ்ணர் திருக்கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 6 ஆம் திருவிழாவான அன்று திருவிழா களை கட்டத் தொடங்கியது. வேடமணியும் தசரா குழுவினர் காலை முதலே வரத் தொடங்கினர்.
அவர்கள் கடலில் புனித நீராடிவிட்டு கோவிலுக்கு சென்று காப்பு கட்டிக்கொண்டனர். இரவில் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 7 ஆம் திருவிழாவான இன்று இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா வருகிறார்.
கரகாட்டம், டிஸ்கோ டான்ஸ்
இன்று முதல் 10-ம் திருவிழா வரை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தசரா குழுவினர் வேடமணிந்து ஊர் ஊராக சென்று மேளம், டிரம் செட், செண்டா மேளம், கரகாட்டம், டிஸ்கோ டான்ஸ் போன்ற கலைநிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.
மேலும் காணிக்கைகளை வசூலித்து கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடனாக செலுத்துவார்கள். தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹாரம் வரும் 2-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் கடற்கரை வளாகத்தில் வைத்து நடைபெறுகிறது.
கலைநிகழ்ச்சிகள் தொடங்கியது
தற்போது தசரா குழுக்களின் கலைநிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளதால் குலசை சுற்றுவட்டார பகுதிகள் களை கட்டியுள்ளது. சுற்றிலும் உள்ள ஊர்களில் திரும்பும் திசையெல்லாம் வண்ணவிளக்குகள், அலங்கார லைட்கள் கட்டி, சுமார் 20 கிலோமீட்டர் சுற்றளவு ஊர்களில் திருவிழா களை கட்டியுள்ளது.
தசரா திருவிழாவையொட்டி கடந்த 22 ஆம் தேதி முதல் அரசு பஸ்கள் குலசேகரன்பட்டினம் ஊருக்குள் வந்துசெல்ல தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலையில் இறக்கிவிடப்படுகின்றனர். உடன்குடி உள்ளிட்ட ஊர்களிலிருந்து வந்தாலும் புறவழிச்சாலையில் இறக்கிவிடப்படுகிறார்கள்.
போக்குவரத்து மாற்றம்
இதனால், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே புறவழிச்சாலையில் பக்தர்களுக்கான நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. உடன்குடி செல்லும் சாலை சந்திப்பில் நின்றுகொண்டே பயணிகள் பேருந்துகளில் ஏறுவதை பார்க்க முடிகிறது. இதனால், போதிய வசதிகள் செய்து தரவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications