Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛சுத்துப்போட்ட பாஜக’.. அரசு விளம்பரத்தில் சீன கொடி என்பது தெரியாமல் நடந்த தவறு - அமைச்சர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியின் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இது குறித்த விளம்பரத்தில் சீன கொடி பயன்படுத்தப்பட்டிருந்தது குறித்து பாஜக விமர்சனம் செய்திருந்த நிலையில், தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இதற்கு விளக்கமளித்துள்ளார்.

நேற்று தூத்துக்குடி வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டி, ரூ. 17,300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் தமிழக அரசு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர். ஆனால் தூத்துக்குடியின் பொறுப்பு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்கவில்லை.

Minister Anitha Radhakrishnan has explained about the Chinese flag being featured in the advertisement

மறுபுறம், இந்த நிகழ்ச்சி குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் கொடுத்திருந்த விளம்பரத்தில் சீன கொடி இருந்தது சர்ச்சையை கிளப்பியிருந்தது. இது குறித்து விமர்சித்திருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,

"திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று முன்னணி தமிழ் நாளிதழ்களுக்கு அளித்த விளம்பரம், சீனா மீதான திமுகவின் அர்ப்பணிப்பையும், நமது நாட்டின் இறையாண்மையை அவர்கள் முற்றிலும் புறக்கணிப்பதையும் வெளிப்படுத்துகிறது.

ஊழலில் கொடிகட்டிப் பறக்கும் கட்சியான திமுக, குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ஸ்டிக்கர்களை ஒட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. விரக்தியின் வெளிப்பாடு அவர்களின் கடந்த கால தவறுகளை புதைக்கும் முயற்சியை மட்டுமே நிரூபிக்கிறது. ஆனால் சதீஷ் தவான் விண்வெளி மையம் இன்று ஆந்திராவில் மட்டும் உள்ளது, ஏன் தமிழ்நாட்டில் இல்லை என்பதை திமுகவுக்கு நாம் நினைவூட்ட வேண்டும்.

இஸ்ரோவின் முதல் ஏவுதளம் கருத்தாக்கம் செய்யப்பட்டபோது, இஸ்ரோவின் முதல் தேர்வாக இருந்தது தமிழ்நாடுதான். இதற்கான கூட்டத்தில் அப்போதைய தமிழக முதல்வர் அண்ணாதுரை கடுமையான தோள்பட்டை வலி காரணமாக பங்கேற்க முடியாத நிலையில், தனது அமைச்சர்களில் ஒருவரான மதியழகனை கூட்டத்திற்கு அனுப்பி வைத்தார்.

அவருக்காக இஸ்ரோ அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்து, இறுதியில் மதியழகன் கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டார். அதுவும் மோசமான ரீதியில் கலந்துகொண்டார். இதுதான் 60 ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டின் விண்வெளித் திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பு. திமுக பெரிதாக மாறவில்லை, இன்னும் மோசமாகிவிட்டது" என்று விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், இது குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், "விளம்பரத்தில் சீன கொடி இடம்பெற்றது தெரியாமல் நடந்த தவறு. இதில் எந்த நோக்கமும் கிடையாது. அரசு விழாவில் பிரதமர் அரசியல் பேசியது ஏற்புடையதல்ல" என்று விளக்கமளித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+