Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தூத்துக்குடி எட்டயபுரத்தில் ஆணவக் கொலை? காதல் திருமணம் செய்த.. புதுமண தம்பதி கொடூரமாக வெட்டி படுகொலை

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: எட்டயபுரம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கராஜ். 28 வயதான இவர், எட்டயபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்.

இவரது தாய்மாமா முத்துக்குட்டி என்பவர் மகள் ரேஷ்மா (20). இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்துள்ளனர்.

ஏற்கவில்லை

ஏற்கவில்லை

இருப்பினும், இவர்கள் காதலுக்கு ரேஷ்மாவின் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை. உறவினர் என்றாலும் கூட மாணிக்கராஜை ரேஷ்மாவின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த எதிர்ப்பை தாண்டி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாணிக்கராஜ் மற்றும் ரேஷ்மா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பெற்றோர் எதிர்ப்பு காரணமாக சில மாதங்களாக அவர்கள் வெளியூரில் தங்கி இருந்தாக கூறப்படுகிறது.

படுகொலை

படுகொலை

திருமணம் ஆகி கொஞ்சக் காலம் ஆகிவிட்டதால், பெற்றோரின் கோபம் குறைந்து இருக்கும் எனக் கருதி இருவரும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்புதான் ஊருக்குத் திரும்பி உள்ளனர். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாணிக்கராஜும் அவரது காதல் மனைவி ரேஷ்மாவும் இன்று கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். வீட்டில் இருவரும் தனியாக இருக்கும் நேரம் பார்த்து நுழைந்த மர்ம நபர்கள், இருவரையும் சரமாரியாக வெட்டியதாகத் தெரிகிறது. இதில் இருவருமே அப்படியே ரத்த வெள்ளத்தில் சரிந்து உள்ளனர்.

ரத்த வெள்ளத்தில்

ரத்த வெள்ளத்தில்

இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனே இது தொடர்பாக எட்டயபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த எட்டயபுரம் போலீசார், உடலைக் கைப்பற்றிய உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

முதற்கட்டமாக இந்த இரட்டை கொலை தொடர்பாக ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி சொந்த ஊருக்குத் திரும்பிய சில நாட்களிலேயே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+