ஸ்டெர்லைட் தீர்ப்பு... வைகோவுக்கு எந்த சம்பந்தமும் இல்லைங்க... சொல்கிறார் அமைச்சர் கருப்பணன்
Recommended Video

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் தீர்ப்புக்கும் வைகோவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அமைச்சர் கே.சி கருப்பணன் கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கத் தடை விதித்தும், சம்பந்தப்படட வேதாந்தா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறும் உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மேலும், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யும் அதிகாரம் பசுமை தீர்ப்பாயத்துக்கு இல்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தன் வாழ்க்கையிலேயே மகிழ்ச்சியான நாள் எனக் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள மைலம்பாடியில் பலவேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான பூமி பூஜையில் அமைச்சர் கே.சி கருப்பணன் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஸ்டெர்லைட் தொடர்பான மேல்முறையீடு வழக்கில் அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞரின் வாதத் திறமையே தீர்ப்பு சாதகமாக வந்ததற்குக் காரணம் என்றார். மேலும், வைகோவுக்கும், ஸ்டெர்லைட் தீர்ப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறினார்.
இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தொடர்பான அரசாணை குறித்து பொய் பரப்புரை மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அரசாணையானது அரசின் உச்சபட்ச அதிகாரம் என்று கூறிய அவர், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக சிலர் மக்களை திசை திருப்புவதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications