தமிழக மக்களை கட்டுப்படுத்த நினைக்கும் பிரதமரின் எண்ணம் தவறானது - ராகுல் காந்தி சாடல்
தமிழக அரசை கட்டுப்படுத்துவது போல் தமிழக மக்களையும் கட்டுபடுத்த பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: தமிழக அரசை கட்டுப்படுத்துவது போல தமிழக மக்களையும் கட்டுபடுத்த பிரதமர் நினைக்கிறார். பிரதமரின் எண்ணமும் செயலும் தவறானது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். தமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. தமிழகத்தை யாராவது கட்டுப்படுத்த நினைத்தால் அது முடியாது என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. காங்கிரஸ் கட்சியும் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்காக தூத்துக்குடி வந்த ராகுல் காந்திக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது பேசிய ராகுல் காந்தி, இந்திய பிரதமர் மோடி நாட்டிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத பல கருத்துக்களை தெரிவித்து வருவதாக குற்றம் சாட்டினார்.
நாட்டில் பல்வேறு கலாச்சாரப் பாரம்பரியம் ஆகியவை இருக்கிறது. தமிழ் மொழிக்கு உன்னதமான கலாச்சாரம் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே நாகரீகம் என தெரிவித்து வருகிறார்.
நரேந்திர மோடி தமிழ் நாட்டின் வரலாற்றை இந்தியாவின் வரலாறாக பார்க்கவில்லையா? தமிழின் பெருமை மற்றும் பாரம்பரியத்தை இந்தியாவின் பாரம்பரியமாக பார்க்கவில்லையா? ஒரு கருத்து இந்தியாவை ஆட்சி செய்யும் என்றால் அந்தக் கருத்தை நமக்கு தேவையில்லை என்றார் ராகுல்காந்தி.
தமிழக அரசை கட்டுப்படுத்துவது போல தமிழக மக்களையும் கட்டுபடுத்த பிரதமர் நினைக்கிறார். பிரதமரின் எண்ணமும் செயலும் தவறானது. தமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்று கூறினார்.
தமிழகத்தை யாராவது கட்டுப்படுத்த நினைத்தால் அது முடியாது என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. நல்ல அரசையும் மக்களுக்கு நல்லதை செய்யும் அரசையும் கொண்டு வர நாம் நினைக்கிறோம். அரசு தொழிலாளர்களை விவசாயிகளை சிறு குறு வியாபாரிகளை பாதுகாக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
-
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications