சாத்தான்குளத்தில் மேலும் ஒரு கைதிக்கு திடீர் உடல்நலக் குறைவு.. கோவில்பட்டி மருத்துவமனையில் அனுமதி
சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் மேலும் ஒரு கைதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.
சாத்தான்குளம் பனைகுளத்தை சேர்ந்தவர் ராஜாசிங். இவர் விசாரணைக் கைதியாக கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதனால் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ராஜாசிங் அனுமதிக்கப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (56) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31), ஆகியோர் ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்ததாக சொல்லப்படுகிறது.
அவர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் கோவில்பட்டி சிறையில் விசாரணை கைதிகளாக அடைத்து வைத்திருந்தனர். இந்த நிலையில் இருவரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications