Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கைக்கு கடத்தப்பட்ட மர்ம படகு.. தூத்துக்குடியில் தடுத்த போலீஸ்.. உள்ளே பார்த்தால் அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி : தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இலங்­கை­யில் ஏற்­பட்­டுள்ள கடும் பொருளாதார நெருக்­க­டி­யா­லும், உண­வுப் பொருள்­க­ளின் மித­மிஞ்­சிய விலை ஏற்­றத்­தா­லும் அங்­குள்ள தமிழர்கள் தமி­ழகம் நோக்கி வந்துகொண்டுள்­ள­னர். மேலும், பலர் அகதிகளாக தமிழ­கத்­திற்கு வரக்­ கூ­டும் என்­ப­தால், இந்­திய கடற்­ப­டையின் ஹோவர் கிரா­ஃப்ட் ரோந்துப் படகு மூலம் தீவிர கண்­கா­ணிப்­பு நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரம் தமி­ழ­கத்­தி­லி­ருந்து இலங்­கைக்கு உணவு, தங்­கம், எரி­பொ­ருள்­ உள்­ளிட்­டவை கடத்­தப்­ப­டு­கின்­ற­னவா? என்பதையும் அதி­கா­ரி­கள் தீவிரமாக கண்­காணித்து வருகிறார்கள்.

 Pain reliever pills tried to be smuggled to Sri Lanka by boat, seized

இந்நிலையில், தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு ஒரு படகில் பொருள்கள் கடத்தப்படுவதாக குற்றவியல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில், உதவி ஆய்வாளர்கள் வேல்ராஜ், ஜீவமணிதர்மராஜ், சிறப்பு உதவியாளர் மாரி உள்ளிட்டோர் அடங்கிய போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பதிவு எண் இல்லாமல் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒரு படகை அவர்கள் சோதனை செய்தனர். அதில், 443 அட்டைகளில் 4,430 வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

போலீசாரை கண்டதும் படகில் இருந்தவர்கள் தப்பி சென்று விட்டதால், மாத்திரைகளையும், படகையும் கைப்பற்றிய போலீசார், அவைகளை சுங்கத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர். முதல்கட்ட விசாரணையில், வலி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும், அங்கு இந்த மாத்திரைகளுடன் கூடுதல் பொருள்களை சேர்த்து போதைப்பொருளாக பயன்படுத்தப்படுவதாவும் போலீசார் தெரிவித்தனர்.

 Pain reliever pills tried to be smuggled to Sri Lanka by boat, seized

பறிமுதல் செய்யப்பட்ட இந்த மாத்திரைகள், நரம்பு வலி, நடுக்கம், வலிப்பு போன்றவைகளுக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. மேலும், இது நீரிழிவு நரம்பு வலி, வலிப்பு, தண்டுவட பாதிப்பு, ஓய்வற்ற கால் நோய் மற்றும் பொதுவான பதற்றக் கோளாறுகளுக்கும் இந்த மாத்திரைகள் சிகிச்சைக்குப் பயன்படுவதாக கூறப்படுகிறது.

இலங்கைக்கு, தமிழகத்தில் கடல் வழியாக சட்டவிரோதமாக அவ்வவ்போது கஞ்சா, புகையிலை, மஞ்சள், ஏலக்காய், களைக்கொல்லி மருந்து என கடத்தி வந்த நிலையில், தற்பொழுது வலி நிவாரண மாத்திரைகளும் கடத்தப்பட்ட சம்பவம், தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+