புகார் அளிக்க வந்த பெண்.. போன் நம்பரை எடுத்து 'டபுள் மீனிங்' ஆபாச பேச்சு.. வரம்பு மீறிய எஸ்.ஐ
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சுதாகர் என்ற சப் இன்ஸ்பெக்டர், புகார் கொடுக்க வந்த பெண்ணின் செல்போனை எடுத்து அவரிடம் ஆபாசமாக பேசியுள்ளார். இது குறித்த விவரத்தை இங்கே பார்க்கலாம்.
பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படும் போது காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்கள். போலீசாரும் இந்த புகார்களை வாங்கி உரிய நடவடிக்கை எடுப்பதுதான் வழக்கம். இருந்தாலும் ஒரு சில போலீஸ் நடந்து கொள்ளும் விதம் காவல் நிலையத்திலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்று யோசிக்க வைக்கும் அளவில் தான் உள்ளது.

தூத்துக்குடியில் இதுபோன்ற ஒரு சம்பவம்தான் நடைபெற்றுள்ளது. உடனடியாக காவல்துறையும் இந்த விவகாரத்தில் உரிய ஆக்ஷனை எடுத்துள்ளது. தூத்துக்குடியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் வரம்பு மீறி நடந்து கொண்ட சம்பவத்தின் விவரத்தை பார்க்கலாம்.. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சுதாகர்.
இவர் தனது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த திருமணம் ஆன பெண் ஒருவரின் புகார் மனுவில் இருந்து செல்போன் எண்ணை எடுத்து இருக்கிறார். பின்னர் அந்த பெண்ணை தொலைபேசியில் அழைத்து இரட்டை அர்த்தங்களுடன் ஆபாசமாக பேசி அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். அந்த பெண் மறுத்தாலும் விடாத எஸ்.ஐ தொடர்ந்து ஆபாசமாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பெண் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர், எஸ்.ஐ -யை தொடர்பு கொண்டு தனது மனைவியிடம் இப்படி பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார். ஆனால், தப்பை உணராமல் அந்த எஸ்.ஐயோ உன்னை கைது செய்து உள்ளே தள்ளிவிடுவேன்.. என மிரட்டியிருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ந்த போன அந்த பெண்ணும் அவரது கணவரும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் கண்கணிப்பாளரிடம் நேரில் சென்று புகார் அளித்தனர்.
இதையடுத்து விசாரணை நடத்திய போலீஸ் சூப்பிரண்ட், புகாருக்கு உள்ளான எஸ்.ஐ சுதாகரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் தற்போது, காவல் கண்காணிப்பாளரால் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள சப் இன்ஸ்பெக்டருக்கு சிறப்பாக பணியாற்றியதாக கடந்த 4 தினங்களுக்கு முன்புதான் காவல் கண்காணிப்பாளர் பாராட்டு சான்றிதழ் வழங்கியிருந்தார். அதற்குள் புகாருக்குள் சிக்கி ஆயுதப்படைக்கு போலீஸ் எஸ்.ஐ மாற்றப்பட்டு இருப்பது காவல் தூறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம்












Click it and Unblock the Notifications