தூத்துக்குடி எஸ்பியாக பதவியேற்ற ஒரே மாதத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட சிலம்பரசன் ஐபிஎஸ்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் கடந்த மாதம் 3ம் தேதி தான் அந்த பொறுப்பேற்றார். ஆனால் பதவியேற்ற ஒரே மாதத்தில் திடீரென பணி இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். சிலம்பரசன், சென்னை சட்டம்-ஒழுங்கு உதவி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாநகர மேற்கு பகுதி துணை ஆணையர் சி.மதன், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
சிலம்பரசனுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆல்பர்ட் ஜானும் மிகக் குறுகிய காலத்திலேயே மாற்றப்பட்டார். அவர் மத்திய அரசு பணிக்கு சென்றார். தேசிய புலனாய்வு முகமைக்கு எஸ்பியாக மாற்றப்பட்டதால், கடந்த மாதம் 3-ந்தேதி தான் சிலம்பரசன் ஐபிஎஸ் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பொறுப்பேற்றார். இந்தநிலையில் நிர்வாக நலன் கருதி 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதன்படி சிலம்பரசன், சென்னை சட்டம்-ஒழுங்கு உதவி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாநகர மேற்கு பகுதி துணை ஆணையர் சி.மதன், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், தலைமையிட துணை ஆணையர் எஸ்.விஜயகுமார், நெல்லை மேற்கு பகுதி துணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர். ஒரே மாதத்தில் தூத்துக்குடி எஸ்பி சிலம்பரசன் இடமாற்றம் செய்யப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆல்பர்ட் ஜான் மத்திய அரசுப் பணிக்குச் சென்றது எதேச்சையாக நடந்திருக்கலாம் என்றே பார்க்கப்படுகிறது. ஆனால், அவருக்குப் பின் சிலம்பரசன் ஐபிஎஸ் ஒரே மாதத்தில் மாற்றப்படுவது, தேர்தலே காரணம் என்று பார்க்கப்படுகிறது. சிலம்பரசன் ஐபிஎஸ் இதற்கு முன்பு திருநெல்வேலியில் பணியாற்றி உள்ளார். நெல்லை மற்றும் தூத்துக்குடி என அடுத்தடுத்து தென் மாவட்டங்களிலேயே பணியாற்றியதால், தேர்தல் சமயத்தில் 'லோக்கல் இன்புளுயன்ஸ்e' இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் இந்த இடமாற்றம் நடந்திருக்க வாய்ப்பு அதிகம் என பார்க்கப்படுகிறது.
பொதுவாக தேர்தல் காலங்களில் மாவட்டங்களில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அண்மையில் தான் தேர்தல் ஆணையம், தமிழக அரசுக்கு அதிகாரிகளை இடமாற்றம் செய்வது தொடர்பாக உத்தரவிட்டிருந்தது. தேர்தல் காலங்களில் ஒரே இடத்தில் அல்லது அண்டை மாவட்டத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர்கள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது விதியாகும்.அதேபோல் அவரது சொந்த மாவட்டம் என்றால், கண்டிப்பாக நியமிக்கவே கூடாது... இதுவும் விதியாகும். அந்த அடிப்படையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு தேர்தலின் போது மாற்றப்படுவார்கள். அந்த வகையில் தான் தூத்துக்குடியிலும் நடந்துள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications