ஸ்டாலின் முதல்வராக முடியாது.. ராகுல் பிரதமராக முடியாது… தமிழிசை ஆருடம்
தூத்துக்குடி: மோசடி பேர்வழிகள் எல்லாம் மோடியை மோசடி என்று சொல்லக்கூடாது என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வார்த்தைகளை அளந்து பேச வேண்டும் என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடி குறித்து தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என்றார்.
பொய் தகவல்களைக் கூறி பரப்புரை செய்து வருகிறார் கனிமொழி என்றும், ஸ்டாலினால் முதல்வராக முடியாது, அவர் பரிந்துரைக்கும் ராகுலால் பிரதமராக முடியாது எனவும் கூறினார்.
தமிழர்களை பாதுகாக்க வேண்டுமென்றால் மோடிக்கும், அதிமுகவுக்கும் தான் வாக்களிக்க வேண்டும் என்றும் தமிழிசை பிரச்சாரம் செய்தார்.
முன்னதாக, இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டபோது, ஆட்சியில் இருந்த திமுக என்ன செய்தது? என்று கேள்வி எழுப்பிய தமிழிசை சவுந்தரராஜன், திமுகவில் வாரிசுகளுக்கு மட்டும் 8 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் செய்தார்.












Click it and Unblock the Notifications